About Me

2019/06/16

அன்பே மகிழ்ச்சி




எனக்கொரு நண்பர் இருந்தார். அவரும் ஆசிரியர்தான். இலக்கிய ஈடுபாட்டுடன் கூடிய வேடிக்கைப் பேச்சுக்கு அவர் சொந்தக்காரர்.

அவர் அழகானவர்...நடிகர் சரத்பாபுவின் சாயல் ஆனால் மூக்குக் கண்ணாடி அவரிடமில்லை. ஒருநாள் செமினார் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது , அவர் சின்னத்தாடி வைத்திருந்ததைக் கண்டேன்.

"என்ன, தாடியெல்லாம் வச்சிருக்கிறீங்க, காதல் தோல்வியான்னு கேட்டேன்"

சிரிச்சுக் கொண்டே கவிதையொன்று சொன்னார்
(இது அவர் இயற்றினதா இல்லையான்னு தெரியல)

'ம்ம் 
இதயத்தை தாடி என்றேன்
தர மறுத்தாள்....
அந்த தாடியோ இப்ப என் கன்னத்தில
ஒட்டிக்கிட்டுது"

அவர் பதில் சொன்ன விதத்தைக்கேட்டு நானோ சிரிக்க, அவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்க

அன்று ..............
அவர் சொன்ன விசயம் ஒன்று இன்னைக்கும் மலைப்பா இருக்கு. அந்த இலட்சிய இளைஞர் செய்த தியாகம் என்ன தெரியுமா.

அப்போது அவருக்கு வயது 25, அழகில்லாத, வறுமைப்பட்ட திருமண வாய்ப்பே இல்லாத 45 வயதுப் பெண்மணியைத்  துணிந்து திருமணம் செய்தார்.

வாழ்க்கையை  ஈஸியா நினைக்கிற இந்த மனசு எத்தனை ஆண்களுக்கு வரும்! இன்று வரைக்கும் அந்த தம்பதியினர் ரொம்ப சந்தோஷமாக வாழுறாங்கள்.

அன்பே மிகப் பெரிய மகிழ்ச்சி!

- Jancy Caffoor-
   16.06.2019

சிரிப்பூக்கள்



அம்மா -
மிளகாய்த்தூள் கண்ணுக்குள் பட்டால் ஏன் சிவக்குது?

மகள் - மிளகாய் சிவப்பாக இருப்பதால்

(உங்களை விட, உங்க பிள்ளைங்க புத்திசாலிங்களா? )

-------------------------------------------------------------------------------------------------


நடிகன் :- ஏம்பா என்னைச் சுத்தி சுத்தி வாறே!

ரசிகன் : - நான் உங்க Fan ங்க .................


- Jancy Caffoor-
  16.06.2019

சின்னக் குறும்பு





நான் சின்ன பொண்ணா இருக்கிறப்போ, எங்கட ஊர்ல (யாழ்ப்பாணம்) சுவீப் டிக்கற் விக்க ஒருத்தர் வருவார். அவர வைரமாளிகைன்னு சொல்லுவம். அப்படி ட்ரெஸ் எல்லாம் போட்டு ராஜ கம்பீரமா குரல் கொடுத்திட்டு போவார்.

இதில என்ன விசேசம் என்றால் அந்த உருவத்துக்கு என்ர தங்கச்சி ரொம்ப பயம். நான் எங்கேயாவது விளையாட வெளிக்கிட்டா அந்த வாலும் ஒட்டிக் கொண்டு என் பின்னாலேயே வருவா. கொஞ்ச தூரம் போனதும்,

 "இந்தா உன்ன பிடிக்க வைரமாளிகை வாரார்"

 என்று கத்துவேன்.

அழுது கொண்டு தலை தெறிக்க வீட்ட ஓடுவாள் அவள்!

  இதை இப்ப நினைச்சாலும் சிரிப்ப அடக்க முடியல!







- Jancy Caffoor-
   16.06.2019

கனவுகள் சொல்வதென்ன

Image result for கனவு கவிதை

கனவுகள் என்பது உறைந்திருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடா என்பது பற்றி பல நாட்களாய் சிந்தித்திருக்கின்றேன். ஏனெனில் நம்மையுமறியாமல் ஆழ்மனதுள் பதிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தான் கனவாகி கசிந்து வெளிப் பாய்கின்றன.

நான் அண்மையில் கண்ட கனவொன்று இன்னும் என்னுள் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அது அதிகாலைக் கனவு. அதிகாலையில் காணப்படும் கனவுகள் பலிக்குமென்று பலர் சொல்லக் கேட்டுள்ளேன்.

ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தங்கள் வேறுதான்.

கனாக்கள் அழகானதுதான் நாம் விழிக்கும் வரை!

- Jancy Caffoor-
   16.06.2019