நான் சின்ன பொண்ணா இருக்கிறப்போ, எங்கட ஊர்ல (யாழ்ப்பாணம்) சுவீப் டிக்கற் விக்க ஒருத்தர் வருவார். அவர வைரமாளிகைன்னு சொல்லுவம். அப்படி ட்ரெஸ் எல்லாம் போட்டு ராஜ கம்பீரமா குரல் கொடுத்திட்டு போவார்.
இதில என்ன விசேசம் என்றால் அந்த உருவத்துக்கு என்ர தங்கச்சி ரொம்ப பயம். நான் எங்கேயாவது விளையாட வெளிக்கிட்டா அந்த வாலும் ஒட்டிக் கொண்டு என் பின்னாலேயே வருவா. கொஞ்ச தூரம் போனதும்,
"இந்தா உன்ன பிடிக்க வைரமாளிகை வாரார்"
என்று கத்துவேன்.
அழுது கொண்டு தலை தெறிக்க வீட்ட ஓடுவாள் அவள்!
இதை இப்ப நினைச்சாலும் சிரிப்ப அடக்க முடியல!
- Jancy Caffoor-
16.06.2019
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!