கனவுகள் என்பது உறைந்திருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடா என்பது பற்றி பல நாட்களாய் சிந்தித்திருக்கின்றேன். ஏனெனில் நம்மையுமறியாமல் ஆழ்மனதுள் பதிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தான் கனவாகி கசிந்து வெளிப் பாய்கின்றன.
நான் அண்மையில் கண்ட கனவொன்று இன்னும் என்னுள் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அது அதிகாலைக் கனவு. அதிகாலையில் காணப்படும் கனவுகள் பலிக்குமென்று பலர் சொல்லக் கேட்டுள்ளேன்.
ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தங்கள் வேறுதான்.
கனாக்கள் அழகானதுதான் நாம் விழிக்கும் வரை!
16.06.2019
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!