About Me

2020/05/29

சுகமான காத்திருப்பு




காற்று விரிக்கும் தாமரையிலை மிதித்து
நீரலைக் கசங்கலில் தன்முகம் பார்த்து
காத்துக் கிடக்கும் நாராய் யுன்தேடல்
சுகமான சுமைதான் தளராத முயற்சிதான்!
.
வண்ண மீன்களின் கன்னம் உரச
வாசனை பிழியும் வெண் டாமரையுடன்
ஒப்பந்தம் வரைகின்ற வெண்நாரையுன் னழகில்
உணர்வுகள் கலந்து கரைகின்றன சுகமாய்!
.
கரை நின்றால் இரை வாராதேயென்றே
நரையுடல் நகர்த்தி நீரில் மிதக்கும்
உன் எழில்கோலத்தில் முளைக்கின்றது தத்துவமொன்று
என்றும் சந்தர்ப்பங்களைத் தேடி ஓடென்று!
.
ஜன்ஸி கபூர்
 

2020/05/28

மல்லிகை

மல்லிகை இதழ்கள் காற்றிலே உரசி
தள்ளாடி நிற்கையில் வாசம் பரவுதே!
இருளுக்குள் விருந்தோம்பும் உன்னத குணத்தால்
சிறகடிக்கும் வண்டும் பேருவகை கொள்ளுதே!

ஜன்ஸி கபூர் -