About Me

2020/05/29

சுகமான காத்திருப்பு




காற்று விரிக்கும் தாமரையிலை மிதித்து
நீரலைக் கசங்கலில் தன்முகம் பார்த்து
காத்துக் கிடக்கும் நாராய் யுன்தேடல்
சுகமான சுமைதான் தளராத முயற்சிதான்!
.
வண்ண மீன்களின் கன்னம் உரச
வாசனை பிழியும் வெண் டாமரையுடன்
ஒப்பந்தம் வரைகின்ற வெண்நாரையுன் னழகில்
உணர்வுகள் கலந்து கரைகின்றன சுகமாய்!
.
கரை நின்றால் இரை வாராதேயென்றே
நரையுடல் நகர்த்தி நீரில் மிதக்கும்
உன் எழில்கோலத்தில் முளைக்கின்றது தத்துவமொன்று
என்றும் சந்தர்ப்பங்களைத் தேடி ஓடென்று!
.
ஜன்ஸி கபூர்
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!