தென்றல் பூ மேனிகள் போர்த்தும்
கொன்றல் தூறல் பிழிந் தூற்றும்
ஒளியின் வாசத்தில் மகரந்தம் திறக்கும்
களிப்பில் மனம் துள்ளி யாடும்
வருடும் காற்றில் சுகமாய் சாய்ந்து
நறுமணம் சிந்தும் மலர் இதழ்களில்
சிறகடிக்கும் வண்ணாத்துப்பூச்சி மெல்லத் தழுவி
நறவில் முத்தமிட்டு காதல் செய்யுதோ
இயற்கைத் தூரிகையின் வண்ணச்; சிதறல்கள்
மலர்ச் சோலையின் உயிர் ஓவியங்கள்
மொட்டுக்கள் பக்கத்தில் எட்டிப் பார்க்க
வெட்கத்தில் சிவக்கும் இதழ்களும் பேரழகே
பஞ்சுமேனி வண்ணத்துப்பூச்சியின் கொஞ்சும் விழிகள்
அஞ்சிடாமல் அள்ளிப் பருகும் மகரந்தங்களை
தன் வம்சம் வளர்க்கும் தாய்மையால்
தென்றலில் புன்னகைத்து மகிழ்ந்தாடும் மலர்கள்
ஜன்ஸி கபூர்