About Me

2020/06/04

தாயெனும் பெண்மை

 உதிரம் இழைத்து நெய்த கருவை
உயிரில் இணைத்தே வாழும் உறவு/
அன்னைக்கும் பெயர் உண்டாம் அன்பு
என்றைக்கும் நம் நிழலாய் தொடருமது

அன்பைப் பிசைகையில் தித்திப்பும் மகிழ்வும்
தன் துயர் மறைத்து பிள்ளையின் புன்னகையில்
இன்பம் தேடும் அழகிய தாய்மையில்
இறைவனைக் கண்டேனே சிறகடித்துப் பறந்தேனே

காணும் கனாக்களில் பிள்ளையின் நினைவிருத்தி
நோய்க்கு மருந்தாகி உருகி கலங்கி
சேயின் துடிப்பில் தன் அதிர்வுகள் கலந்து
வாழ்தலுடன் வாழ்ந்து காட்டுதலே தாயெனும் பெண்மை

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!