அத்தி மரப் பூவே நித்திலத்தின் அற்புதமே
சித்திரமே சிந்தையினிக்கும் இனிய செல்லமே
முத்தேயுன் நகையழகில்; மயங்கித்தான் போனேனடி
மாதுளம் பூச்சாற்றில் ஊறிய உதட்டோரம்
மழலைத் தமிழெடுத்தே மயக்குவாய் பல பேரை
மங்காத குறும்புகளால் மனசைத்தான் கிள்ளிடுவாய்
நீங்காத நினைவோட்டத்தின் நினைவும் நீயாய்
குறுநகை சிந்தி குதூகலித்த வதனம்
குதூகலம் சிந்தி பலரை ஈர்க்கும்
குயிலின் நாதமாய் ஒலிரும் குரலாலே
பழகும் மாந்தரும் சொக்கித்தான் போவாரடி
சிட்டாய்ப் பறக்கும் குட்டியே
எட்டு வயதோ உனக்குள்
பட்டுப் பூக்களால் தூவியுன்னை வாழ்த்துகிறேன்
கட்டிப் போடும் அன்போடு பல்லாண்டு வாழ்கவே
இத்தனை அழகோடு இன்றைய நாளினில்
இனிதாய் பூத்திட்ட இனிய நிலா சஹ்ரிஸிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உமம்மா குடும்பத்தினர் - (ஜன்ஸி கபூர்) - 12.07.2020