About Me

2020/07/12

தனிமை



தூரத்து நிலவும்////
தூங்காத விண்மீன்களும் துணையிருக்கும்////
விடியாத இருட்டும் அருகிருக்க////
மனதுக்குள் ஏது தனிமை////


ஜன்ஸி கபூர் - 12.07.2020

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


அத்தி மரப் பூவே நித்திலத்தின் அற்புதமே
சித்திரமே சிந்தையினிக்கும் இனிய செல்லமே
முத்தேயுன் நகையழகில்; மயங்கித்தான் போனேனடி

மாதுளம் பூச்சாற்றில் ஊறிய உதட்டோரம்
மழலைத் தமிழெடுத்தே மயக்குவாய் பல பேரை
மங்காத குறும்புகளால் மனசைத்தான் கிள்ளிடுவாய்
நீங்காத நினைவோட்டத்தின் நினைவும் நீயாய்

குறுநகை சிந்தி குதூகலித்த  வதனம்
குதூகலம் சிந்தி பலரை ஈர்க்கும்
குயிலின் நாதமாய் ஒலிரும் குரலாலே
பழகும் மாந்தரும் சொக்கித்தான் போவாரடி

சிட்டாய்ப் பறக்கும் குட்டியே
எட்டு வயதோ உனக்குள்
பட்டுப் பூக்களால் தூவியுன்னை வாழ்த்துகிறேன்
கட்டிப் போடும் அன்போடு பல்லாண்டு வாழ்கவே

இத்தனை அழகோடு இன்றைய நாளினில்
இனிதாய் பூத்திட்ட இனிய நிலா சஹ்ரிஸிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உமம்மா குடும்பத்தினர் - (ஜன்ஸி கபூர்) - 12.07.2020







துள்ளும் அழகுப் பிள்ளை நிலா

அத்தியின் மொட்டே நித்திலத்தின் அற்புதமே//
பத்துத் திங்கள் பக்குவத்தில் விளைந்த உசுரே//
சித்திரமே சிந்தையினிக்கும் இல்லறத் தவமே//
முத்தேயுன் நகையழகில்; நசுங்குதே ஏழ்மையும்//

குறுநகை சிந்தி குதூகலித்தது வதனமும்//
குயிலின் நாதமாய் ஒலிர்ந்ததே குரலும்//
விழிகளும் மயக்கிடும் விடிவிளக்காய் ஆனதில்//
பழகும் மாந்தரும் சொக்குவர் இவள் அன்பாலே//

மாமரத்து தூளியிலுனை மாமன் ஆட்டிடுகையில்//
வேப்ப மரக்காற்றும் தாலாட்டும் தாய்போல//
தேன் வழியும் சொல்லெடுத்து அழுதிடும்போது//
வான்மகளும் திரை விரிப்பாள் ஈரத்தோடு//

மாதுளம் பூச்சாறு ஊற்றிய உதட்டோரம்//
மழலைத் தமிழும் கசிந்திடும் எழிலாக//
மங்கலமாய் உதித்த வெண்ணிலா இவள்//
மனங்களின் மெல்லிசையாய் வாட்டம் தீர்த்தாளே//

ஜன்ஸி கபூர்  


சோலைவனத்திலே மாலைநேரக் குயில்கள்

சோலைவனக்குயிலே சோடியென் மயிலே/
சோதனை வேண்டாமடி சேர்ந்திட வாடி புள்ள/
ஓலைக் குடிசைக்குள்ளும் அழகாய்; காதல்/
வாலைக்குமரியே வந்தாடு வாழ்க்கை நாமாகவே/

நாதமிசைத்தே நெஞ்சுக்குள்ள நாணி ஓடுகிறாய்
வேதம் நீதானே வேண்டும்; மதியே நீயெனக்கு
மோகம் நெய்தாய் உசுரைப் பிழிந்தே
மோதும் காற்றிலே வெட்கம் கலக்கிறாய்

செந்தமிழாய் வாழ்வோ டிணைந்தாய்
சந்தனமாய் மூச்சுக்காற்றில் உறைந்தாய்
வந்தாய் விழியின் ஈர்ப்பில் புள்ளே
எந்நாளும் எனையே நீயும் ஆண்டாய்

மருதாணிச் சாறாய் உந்தன் உதடு புள்ள
பருவ நிலா  உந்தன் மேனியின் எழிலாய்
கரும்பும் கூட சுவைக்கவில்லை
இரும்பு மனசுக்குள் நீதான் இனிமை

நாடி வந்தேன் அன்பால்தான்
நாமும் சேர்ந்தால் நலமேதான்
வாழும் வாழ்க்கை வசந்தமாய்ப் பூக்கட்டும்
பாலும் பழமாய் இணைந்திட வாடி புள்ள

-ஜன்ஸி கபூர்