About Me

2020/07/12

சோலைவனத்திலே மாலைநேரக் குயில்கள்

சோலைவனக்குயிலே சோடியென் மயிலே/
சோதனை வேண்டாமடி சேர்ந்திட வாடி புள்ள/
ஓலைக் குடிசைக்குள்ளும் அழகாய்; காதல்/
வாலைக்குமரியே வந்தாடு வாழ்க்கை நாமாகவே/

நாதமிசைத்தே நெஞ்சுக்குள்ள நாணி ஓடுகிறாய்
வேதம் நீதானே வேண்டும்; மதியே நீயெனக்கு
மோகம் நெய்தாய் உசுரைப் பிழிந்தே
மோதும் காற்றிலே வெட்கம் கலக்கிறாய்

செந்தமிழாய் வாழ்வோ டிணைந்தாய்
சந்தனமாய் மூச்சுக்காற்றில் உறைந்தாய்
வந்தாய் விழியின் ஈர்ப்பில் புள்ளே
எந்நாளும் எனையே நீயும் ஆண்டாய்

மருதாணிச் சாறாய் உந்தன் உதடு புள்ள
பருவ நிலா  உந்தன் மேனியின் எழிலாய்
கரும்பும் கூட சுவைக்கவில்லை
இரும்பு மனசுக்குள் நீதான் இனிமை

நாடி வந்தேன் அன்பால்தான்
நாமும் சேர்ந்தால் நலமேதான்
வாழும் வாழ்க்கை வசந்தமாய்ப் பூக்கட்டும்
பாலும் பழமாய் இணைந்திட வாடி புள்ள

-ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!