வான்முகில் வந்திட மயில்கள் ஆடிட
தேன் துளிகளின் தித்திப்பில் மனமாட
கண்ணோரம் நனைந்திடும் இயற்கையின் எழிலில்
எண்ணமும் சிறகடித்துப் பறந்திடுமே உவகையினில்
வெடித்த தரைக்குள் உயிர்த்த அரும்பும்
வெற்றிச் சிலிர்ப்பினில் புன்னகையை ஊற்றும்
பசுமைக் குடையின் ஈர்ப்பில் புவியும்
பரவசத்தில் செழிப்பினைக் காட்டும் விழிகளுக்கே
பறவைக் கூட்டத்தின் குளியலோ விண்ணில்
உறவாகுமே மழையின் இனிமையும் மனதில்
ஜன்ஸி கபூர்