மகிழ்ந்திடும் மலர்களின் இதழ்களில் பனித்துளிகள்
மொய்த்திடுதே பருக்களாக பருவத்தில் மலர்களோ
தென்றலும் வருடுகையில் வெட்கத்தில் சிவந்திடும்
அழகினை ரசிக்கையில் மனதுக்குள் பரவசமே
ஜன்ஸி கபூர்
மகிழ்ந்திடும் மலர்களின் இதழ்களில் பனித்துளிகள்
மொய்த்திடுதே பருக்களாக பருவத்தில் மலர்களோ
தென்றலும் வருடுகையில் வெட்கத்தில் சிவந்திடும்
அழகினை ரசிக்கையில் மனதுக்குள் பரவசமே
ஜன்ஸி கபூர்
உயிரில் கலந்து உதிரத்தில் செதுக்கி/
செதுக்கி எடுத்தாரே அன்னையும் அன்பாலே/
அன்பாலே மனங்களை ஆள்கின்றார் நிதமும்/
நிதமும் நினைவுகளில் வாழ்கின்ற உறவே/
உறவே உயர்வாகும் தாய்மையின் நிழலிலே/
நிழலிலே ஒதுங்குகையில் துயரமெல்லாம் இன்பமே/
இன்பமே இதயத்தில் இணைந்திருக்கின்ற வாழ்விலே/
வாழ்விலே கண்டெடுத்த அன்பின் சொர்க்கமே/
சொர்க்கமே என்பேனே தாயின் மடியும்/
மடியும் துடைத்திடும் எந்தன் துன்பத்தை/
ஜன்ஸி கபூர்
வகுப்பறையே வரம்தானே ஆளுமைகள் சிறந்திடவே/
வாழ்க்கையின் அனுபவங்களை பாடங்களாய் கற்கையிலே/
வெற்றியின் வழியினில் சாதனைகள் நமதாகும்/
கற்கண்டாய் திறமைகளும் காண்பவரைக் கவர்ந்திடுமே/
கல்வியினால் பெற்றிடும் நடத்தை மாற்றங்களே/
சிறந்த மனிதர்களை சமூகத்தினில் உருவாக்கும்/
ஜன்ஸி கபூர்
திருக்குறள்-4
#தற்காத்துத்_தற்கொண்டான்_பேணித் #தகைசான்ற_சொற்காத்துச்_சோர்விலாள்_பெண்.
கற்பின் அழகி
வாழ்தலும் சிறந்திட மங்களமான இல்லாள்/
வாழ்க்கைத் துணையின் உணர்வோடு இசைவாள்/
கற்பின் ஒழுக்கத்தினில் கருத்துடன் கலந்தே/
கட்டிய துணையுடன் புகழையும் காப்பாள்/
வல்லமை மனமே வனப்போடு மனையாள/
வார்த்தை அழகுடன் சோர்வின்றி வாழ்ந்திடுவாள்/
ஜன்ஸி கபூர்