About Me

2020/09/04

அந்தாதிக் கவிதை

 உயிரில் கலந்து உதிரத்தில் செதுக்கி/

செதுக்கி எடுத்தாரே அன்னையும் அன்பாலே/

அன்பாலே மனங்களை ஆள்கின்றார் நிதமும்/

நிதமும் நினைவுகளில்  வாழ்கின்ற உறவே/

உறவே உயர்வாகும் தாய்மையின் நிழலிலே/

நிழலிலே ஒதுங்குகையில் துயரமெல்லாம் இன்பமே/

இன்பமே இதயத்தில் இணைந்திருக்கின்ற வாழ்விலே/

வாழ்விலே கண்டெடுத்த அன்பின் சொர்க்கமே/

சொர்க்கமே என்பேனே தாயின் மடியும்/

மடியும் துடைத்திடும் எந்தன் துன்பத்தை/


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!