About Me

2021/04/07

பயணம்


கசக்கப்பட முடியாத காலடித் தடங்களின்
களைப்பின்றிய பயணம் இலக்கினை நோக்கி....✍✍✍✍

ஜன்ஸி கபூர் - 07.04.2021


 

மௌனம் கலைந்த நேரம்

 -------------------------------------------❤❤❤❤❤❤❤❤❤

vd; tpopr; rpwfpd; Jbg;gpDs;

tPo;fpd;w cd; tpk;gk;

jto;fpd;wNj vd;wd; capupdpy;

mtpo;f;fpd;wNj fdTfisAk; ,uf]pakhf

 

%q;fpy; Jisfspy; Njq;fpLk; fhw;wpy;

NkhJfpd;w ,irahf

khJ ePnad;Ds;

Rthrj;ijAk; Rfkhf;Ffpd;wha;

 

cd; xw;iw tpuy; gw;wp

czu;TfSld; curp elf;ifapy;

ek; epoy;fSk; nkhop NgRfpd;wNjh

kdk; ,urpf;fpd;w nksdj;ijAk; fiyj;J

 

[d;]p fg+u; - 07.04.2021

❤❤❤❤❤❤❤❤❤---------------------------


2021/04/06

உதிரா விழுமியம்

அந்த நீளமான வீதி வாகன இரைச்சலை விழுங்கிக் கொண்டிருந்தது. வெயிலை உறிஞ்சி வியர்த்துக் கொண்டிருந்த மரங்களை மெதுவாக தன் சிறகுகளால் வருடிக் கொண்டிருந்தது காற்று. இயற்கையின் மானசீக ஸ்பரிசங்களை நான் உள்வாங்கிக் கொண்டவளாக இல்லை. 

என் எதிர்பார்ப்பில், "இன்று எப்படியாவது மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும்"  எனும் எண்ணமே நிறைந்திருந்தது. 

 உரிய இடத்தினை கண்டுபிடித்து பணத்தை செலுத்துவதற்காக கவுண்டரை நோக்கி நகர்கின்றேன். கையிலோ காற்றையும் உரசிக் கொண்டிருந்தன பண நோட்டுகள்...... 

 'அக்கா' 

 பின்னால் வந்த இளைஞனின் குரல் எனது வேகத்தை சற்று மந்தப்படுத்தியது. நான் அவனைப் பார்க்கையில் அவனது கைகள் சைகை பாஷையில் எனக்கு எதனையோ உணர்த்திக் கொண்டிருந்தன. அவன் சுட்டிய திசையில் எனது பார்வையும் மொய்த்தது. மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காக கைகளிலிருந்த ஆயிரம் ரூபா நோட்டுக்கள் அங்கே விழுந்து கிடந்தன. 

 எனது நன்றியெனும் வார்த்தைகளை கூட எதிர்பார்க்காதவாறு அந்த இளைஞன் தனது வழியில் நகர்ந்து கொண்டிருந்தான். 

வறுமைக்குள்ளும் ஒளிந்திருந்த அந்த மனிதாபிமானத்தின் உயர் பெறுமானத்திற்கு பெறுமதிதான் ஏது? 

 ஜன்ஸி கபூர் - 06.04.2021

தாய்மை

ஒவ்வொரு பெண்ணிற்கும் இறைவனால் வழங்கப்பட்ட மிகப் பெறுமதியான பொக்கிசம்தான் இந்தத் தாய்மை. தாய்மையின் விம்பத்திற்குள் தெரிகின்ற அம்மாவின் அன்புக்கு நிகராக இவ்வுலகில் எதுவும் இல்லைதானே. தன் இருதயத் துடிப்புக்குள் நமது நலத்தையும் பிணைத்து நமக்காகத் துடித்துக் கொண்டிருக்கின்ற அந்தத் தூய்மையான உறவுக்குள் இந்த உலகமே அன்புடன் அடங்கித்தானே கிடக்கின்றது. 

தன் கண்ணீருக்குள்ளும் பிள்ளைகளை பன்னீரால் நீராட்டும் இந்த இரத்த ஆன்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற ஒவ்வொரு மகவும் தாயின் மடியில் சுவர்க்கத்தை சுவாசிக்கின்ற உத்தமமான உயிர்க்கூடு தானே....

 - ஜன்ஸி கபூர் - 06.04.2021