ஒவ்வொரு பெண்ணிற்கும் இறைவனால் வழங்கப்பட்ட மிகப் பெறுமதியான பொக்கிசம்தான் இந்தத் தாய்மை. தாய்மையின் விம்பத்திற்குள் தெரிகின்ற அம்மாவின் அன்புக்கு நிகராக இவ்வுலகில் எதுவும் இல்லைதானே. தன் இருதயத் துடிப்புக்குள் நமது நலத்தையும் பிணைத்து நமக்காகத் துடித்துக் கொண்டிருக்கின்ற அந்தத் தூய்மையான உறவுக்குள் இந்த உலகமே அன்புடன் அடங்கித்தானே கிடக்கின்றது.
தன் கண்ணீருக்குள்ளும் பிள்ளைகளை பன்னீரால் நீராட்டும் இந்த இரத்த ஆன்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற ஒவ்வொரு மகவும் தாயின் மடியில் சுவர்க்கத்தை சுவாசிக்கின்ற உத்தமமான உயிர்க்கூடு தானே....
- ஜன்ஸி கபூர் - 06.04.2021

No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!