About Me

2021/04/08

அன்பின் தித்திப்பு

 கீச் கீச்.......

நிசப்தத்தை கலைத்தவாறே அணிலொன்று வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அது தன் வாயில் தும்புகளைக் கௌவியவாறு தான் அமைத்து வைத்திருக்கின்ற கூட்டினை நோக்கி ஓடியது.

 மறுபுறமோ வெளிப்புற தென்னை மரத்தின் ஓலைக் குச்சிகளை தன் வாயால் இழுத்துக் கிழித்துக் கொண்டிருந்தது காகமொன்று....

அக்காட்சியைக் கண்ணுற்ற சின்னவள் சஹ்ரிஸ் அவசரமாக என்னை அழைத்து அதனைக் காட்டினாள். அவளின் விழிகளில் பிரமிப்பு பூத்திருந்தது. இன்றுதான் அதனைப் பார்த்திருக்கிறாள் போலும். காகம் கூடு கட்டும் கதையையும் குயில் அதனுள் முட்டையிடும் இரகஸியத்தையும் நான் கூறி முடித்ததும், அவளது குழந்தை அறிவுக்கு அவ்விடயங்கள் பிரமாண்ட அடையாளங்கள்தான் போலும்...அதிசயித்தாள்.


மெல்லிய காற்று நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்த நேரம்...........

சுவரில் ஓடிக்கொண்டிருந்த குட்டி எலியொன்றைத் துரத்திப் பிடித்த பூனையொன்று அதனை தன் வாயில் கௌவியவாறே வீட்டுச் சுவரில் நடந்தது. அதன் பிடியிலிருந்து எலியை விடுவிக்க நான் முயன்றும் தோற்றுப் போனேன். அதன் பின்னால் அதன் குட்டிகளும் ஓடின. 

சிறிது தூரம் சென்றதும் பூனை நின்றது. அதன் வாயில் கௌவியவாறு இருந்த எலிக்குட்டியும் கீழே விழ குட்டிப் பூனைகள் பாய்ந்து அதனை தமது வாயில் கௌவிக் கொண்டு ஓடின. தாய்ப் பூனையோ தான் பிடித்த எலியைத் தன் குட்டிகளுக்கு கொடுத்த திருப்தியில் தரையில் கால்களை நீட்டி மெதுவாக உறங்க ஆரம்பித்தது.

 ஐந்தறிவு ஜீவன்களின் பாச உணர்வுகளின் விம்பங்கள் என் பார்வையில்பட்டுத் தெறித்தபோது அந்த அன்பின் ஆழப் பெறுமானம் கண்முன்னால் மலையளவு உயர ஆரம்பித்தது. தாய்மையின் அன்புக்கு ஐந்தறிவும் விதிவிலக்கல்ல...........

ஜன்ஸி கபூர் - 8.4.2021 



2021/04/07

பயணம்


கசக்கப்பட முடியாத காலடித் தடங்களின்
களைப்பின்றிய பயணம் இலக்கினை நோக்கி....✍✍✍✍

ஜன்ஸி கபூர் - 07.04.2021


 

மௌனம் கலைந்த நேரம்

 -------------------------------------------❤❤❤❤❤❤❤❤❤

vd; tpopr; rpwfpd; Jbg;gpDs;

tPo;fpd;w cd; tpk;gk;

jto;fpd;wNj vd;wd; capupdpy;

mtpo;f;fpd;wNj fdTfisAk; ,uf]pakhf

 

%q;fpy; Jisfspy; Njq;fpLk; fhw;wpy;

NkhJfpd;w ,irahf

khJ ePnad;Ds;

Rthrj;ijAk; Rfkhf;Ffpd;wha;

 

cd; xw;iw tpuy; gw;wp

czu;TfSld; curp elf;ifapy;

ek; epoy;fSk; nkhop NgRfpd;wNjh

kdk; ,urpf;fpd;w nksdj;ijAk; fiyj;J

 

[d;]p fg+u; - 07.04.2021

❤❤❤❤❤❤❤❤❤---------------------------


2021/04/06

உதிரா விழுமியம்

அந்த நீளமான வீதி வாகன இரைச்சலை விழுங்கிக் கொண்டிருந்தது. வெயிலை உறிஞ்சி வியர்த்துக் கொண்டிருந்த மரங்களை மெதுவாக தன் சிறகுகளால் வருடிக் கொண்டிருந்தது காற்று. இயற்கையின் மானசீக ஸ்பரிசங்களை நான் உள்வாங்கிக் கொண்டவளாக இல்லை. 

என் எதிர்பார்ப்பில், "இன்று எப்படியாவது மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும்"  எனும் எண்ணமே நிறைந்திருந்தது. 

 உரிய இடத்தினை கண்டுபிடித்து பணத்தை செலுத்துவதற்காக கவுண்டரை நோக்கி நகர்கின்றேன். கையிலோ காற்றையும் உரசிக் கொண்டிருந்தன பண நோட்டுகள்...... 

 'அக்கா' 

 பின்னால் வந்த இளைஞனின் குரல் எனது வேகத்தை சற்று மந்தப்படுத்தியது. நான் அவனைப் பார்க்கையில் அவனது கைகள் சைகை பாஷையில் எனக்கு எதனையோ உணர்த்திக் கொண்டிருந்தன. அவன் சுட்டிய திசையில் எனது பார்வையும் மொய்த்தது. மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காக கைகளிலிருந்த ஆயிரம் ரூபா நோட்டுக்கள் அங்கே விழுந்து கிடந்தன. 

 எனது நன்றியெனும் வார்த்தைகளை கூட எதிர்பார்க்காதவாறு அந்த இளைஞன் தனது வழியில் நகர்ந்து கொண்டிருந்தான். 

வறுமைக்குள்ளும் ஒளிந்திருந்த அந்த மனிதாபிமானத்தின் உயர் பெறுமானத்திற்கு பெறுமதிதான் ஏது? 

 ஜன்ஸி கபூர் - 06.04.2021