About Me

2012/09/07

Orumurai Piranthaen



வாழ்க்கையென்பது பூவனமாகவும் இருக்கலாம் பாலைவனமாகவும் மாறலாம். நாம் ஒவ்வொருவரும் அந்த வாழ்வை வாழும் தன்மையிலேயே அதன் போக்கும் நம்மைச் சுரண்டுகின்றது.

ஒருமுறை மட்டுமே வாழ வாய்ப்பளிக்கப்பட்ட அந்த வாழ்வின் இன்பங்களை மட்டுமே உறிஞ்சிக் கொள்ளவே போராடுகின்றோம். திருமணம், உறவுகள், காதல் , தொழில் எனும் நம் ஒவ்வொரு வாழ்வின் படிநிலையிலும் ரசிப்பு, மகிழ்வு , வெற்றி என்பவற்றையே மனம் விரும்புகின்றது.

ஒருமுறை நமக்காக கரந்தொடும் அந்த வாழ்வில் காதலித்தவரே கரம் பிடித்தால் மின்னல் பல நெஞ்சுக்குள் வெளிச்சம் அடிக்கும். அந்த வெற்றிகரமான மணவாழ்வின் இணைவுக்கு காதல் வெற்றி பெறவேண்டும்.

இந்தப் பாடலும் இரு உள்ளங்களும் தம் களிப்பை வெளிப்படுத்தும் விதமாக வரிகளை அமைத்துள்ளது. உனக்காகவே பிறந்தேன் உனக்காக வாழப் போகின்றேன்.அந்த வாழ்வில் நீயே என்னை முழுமையாக நிறைத்துக் கொள் எனும் நாயகனின் ஆதங்கம் அழகானது.....



Munbe Va எனும் பாடலை ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!