About Me

2013/04/21

போய் வருகின்றேன்


போய் வருகின்றேன்
சுனாமி கூட சுக அலையாக!

ஆழியின் சுழற்சிக்குள்
அடங்கத் துடிக்குது  தேகம்!

குரல்வளை நனைக்கும் நீர்த்துளிகளால்
சுவாசவோரம் சிதையத் துடிக்குது

இதோ!

இன்னும் சில வினாடிகளில் முற்றாக
இடம்பெயறலாம் ஒட்சிசன் என்னிலிருந்து!

திமிங்கிலம் குதறிய எச்சங்கள்
கரையோரம் வந்து ஒதுங்கலாம்!

சூரிய உதயத்தில் கூட
என்னுருவம் மறைந்தும் போகலாம்!

காத்திருக்கின்றன கடற்பூக்கள் அஞ்சலிக்காய்
பாத்திருக்கின்றன அலைகள் புரட்டியெடுக்க!

வா!
எனக்காக!!

ஒரு துளி உப்பை கடலில் நீயும் சிந்த
காத்திருக்கின்றேன்
பாதி மூச்சையிழுத்து!

- Jancy Caffoor-
     21.04.2013

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!