About Me

2020/10/16

அம்மாவின் முந்தானை

 


அன்பை அள்ளிச் சொருகி அணைத்திடும்/

அம்மாவின் முந்தானை எனக்குப் பஞ்சனையே/

கோர்த்து நிற்கின்ற வியர்வைத் துளியினைப்/

பாசத்தில் ஒற்றியெடுக்கும் அன்பின் உருவது/


உழுதிடும் வெயில்ப் பூக்களும் உருக்கும் மேனிக்கே/

நிழலிடும் உயிர்க் குடைப் பந்தமது/

முந்தானைச் சிறகும் வருடும் காப்பினை/

எந்நாளும் போர்த்துகின்றேன் என்றன் வாழ்வினில்/


ஜன்ஸி கபூர் - 16.10.2020




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!