About Me

2020/11/19

கதியின்றி சகதியில் வாழ்வு

 


கவிதை சாரல் குழு

****--------*******-**----

சமூக விழிப்புணர்வுக் கவிதைப்போட்டி.

சமூக விழிப்புணர்வுக் கவிதைப்போட்டியின் இன்றைய தலைப்பு:

***********

#கதியின்றி_சகதியில்_வாழ்வு

#நெறியாளர்  - #த.#இளங்கோவன்

நடுவர்

********

#கவிஞர்

#ஜன்ஸி_கபூர் அவர்கள்

இவரை பற்றி-

******** ******

இலங்கை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இவர்  இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரிலிருந்து அகதியாக இடம்பெயர்ந்து இரண்டு தசாப்தங்களின் பின்னர் மீளவும்  சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அரச பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியையாகக் கடமையை தொடங்கியுள்ளார். தற்போது கடந்த ஐந்து வருடங்களாக யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயம் எனும் அரச கல்லூரியில் அதிபராக (கல்லூரி முதல்வர்) பணியாற்றுகின்றார். B.Ed  பட்டதாரியான நான்  முதுகல்விமாணி (M.Ed) பட்டதாரியாக உயர் தொழிற்றகைமை கொண்டுள்ளார். 

சிறு வயதிலிருந்தே ஏற்பட்ட இலக்கிய ஆர்வம் இன்றுவரை தொடர்கின்றது. கவிதைகளையும் சிறுகதைகளையும் முன்பு எமது நாட்டுப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வந்த இவர் தற்போது இணைய வழியாக குழுமங்களில் எழுதி வருகிறார். 

கவிதாயினி எனும் வலைப்பூவைத் தயாரித்து அதில் தனது கவிதைகளை பதிவிட்டும் வருகிறார். கல்வித் துறையிலும் இலக்கியத் துறையிலும் சில விருதுகளைப் பெற்றுள்ளார்.

   நாள்:

*******

 பதிவிட்ட இந்நேரம் முதல் ....21.11.2020,சனி இரவு 10.மணிவரை கவிதை படைக்கலாம்.

--------------------------------------------------------------------------------

நடைபெற்ற கவிதைப் போட்டியில் எல்லோரும் சிறப்பாக எழுதியிருந்தீர்கள். எனினும் கவிதைப் போட்டிக்கென சில வரையறைகளும், விதிகளும் உண்டு. ஆங்கிலச் சொல் பயன்பாடு, திருத்தம் மேற்கொள்ளாமை, அதிக சொற்கள், ஒரே சொல்லை ஒன்றிற்கு மேற்பட்ட தடவை பாவித்தல், கவித்துவம் குறைந்த தன்மை போன்ற சில காரணங்களால் சில கவிதைகளைத் தெரிவு செய்ய முடியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். வெற்றிக்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.

வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு பற்றியவர்களுக்கும், என்னை நடுவராக நியமித்த நிறுவுநர், துணைத்தலைவர் உள்ளிட்ட கவிக் குழுமத்திற்கும் எனது நன்றிகளும், வாழ்த்துகளும்-

********************* 

45 வெற்றியாளர்கள்  

********************* 

 


 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!