About Me

2020/12/18

குழந்தையும் தெய்வமும்




குழந்தையும் தெய்வமும்
+++++++++++++++++++++++ 
குதூகலச் சிரிப்பினில் உள்ளம் உவந்தேனே//
உவந்தேனே நிதமும் உன்றன் அழகிலே//

அழகிலே செதுக்குகின்றாய் மழலைக் குறும்புகளை//
குறும்புகளைச் சுவைக்கின்றேன் பொழுதுகள் மகிழ்ந்திடவே//

மகிழ்ந்திடவே மலர்ந்தாய் உறவின் நிழலாய்//
நிழலாய்த் தொடர்கின்றாய் நினைவுகள் தித்திக்கின்றதே//

தித்திக்கின்றதே இல்லமும் உன்றன் அன்பினால்//
அன்பினால் உயிர்த்தே கருவுக்குள் உயிரானாய்//

உயிரானாய் உறவுக்குள் உணர்வுக்கும் அருளானாய்//
அருளானாய் வாழ்விற்குள் நீயென்  தெய்வமுமாகி//

ஜன்ஸி கபூர் - 18.12.2020
 


 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!