About Me

2020/12/21

மனம் போகும் போக்கிலே



 காணும் யாவும் வேண்டும் என்றே/

களிக்கும் பேராசை கலியின் வேட்கையே/

பலிப்பார் அடுத்தார் பயனற்ற செயல்களால்/

வலியினைச் சூடி வாழ்தல் நன்றோ/


தன்னம்பிக்கை இல்லாத் தனித்த பயணம்/

வென்றெடுக்குமோ தடைகளை வெகுமதியும் தந்திடுமோ/ 

மதிப்பினை இழக்கின்ற மதியின் வேகம்/

தகுதியைக் குறைக்கும் தடுமாறும் நிம்மதியும்/


இலக்கில்லா வாழ்வில் இல்லையே ஈடேற்றம்/

இரவெனவே நீளும் விடிவில்லா எதிர்காலமும்/

மனம் போகும் போக்கிலே வாழ்தல்/

மாறிடல் வேண்டும் மாண்போடு வாழ்ந்திடவே/


வெற்றிகளை விரட்டி வெறுமையினைச் சேர்த்தே/

குற்றுயிராகும் உணர்வோடு குடியிருக்கும் தேகம்/

குரங்காகித் தாவும் உள்ளத்தின் குடியிருப்பே/

குறிக்கோள் தீட்டி குதூகலிப்போம் ஆற்றல்களால்/


ஜன்ஸி கபூர் - 21.12.2020

 



 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!