About Me

2020/12/21

விவசாயம் தலைமுறை அறியுமா

 



துளிர்க்கின்ற பசுமைக்குள் உயிர்க்கின்ற வாழ்வினை/
அளிக்கின்ற விவசாயம் அறியவேண்டும் தலைமுறை/

சேற்றில் புதைக்கின்ற காலடித் தடத்தில்/
வீற்றிருக்கின்ற உழைப்பின் வாசம் உன்னதமே/

ஏர் கண்டறியா ஏடுகளைப் புரட்டுகையில்/
ஏற்படுமோ அனுபவங்கள் ஏற்றமுண்டோ பொழுதுகளில்/

கரமும் ஏந்துகின்ற மண்வெட்டி புரட்டுகின்ற/
உரத்தின் சேர்க்கைக்குள்ளே உயர்வின் ஈரம்/

தொலைவில் நின்றே தொலைக்கின்ற உழைப்பை/
கலையாக்கிக் கற்பிப்பதே காலத்தின் சிறப்பு/

ஜன்ஸி கபூர் - 21.12.2020
 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!