About Me

2014/07/25

இனவாதம்



ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். உண்மையில் இனவாதத்தைத் தூண்டும் சகலரும் தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் மட்டும் நோக்கும் மனநோயாளிகள். ஏனெனில் அவர்களிடம் மனிதம் இருப்பதில்லை.

ஒரு சிறுபான்மைச் சமூகம் தன் கலாசார, பொருளாதார, உறவுகளால் சூழப்பட்டிருக்கும் தனது பிரதேசத்தில் தனித்துவத் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதனை சகிக்காத சில பெரும்பான்மை இனவாதியினர் இனவாத அடக்குமுறையை அச்சிறுபான்மையினர்மீது திணிக்கும்போது, உலகத்தில் வாழும் மனிதம் நிறைந்த ஏனைய மக்கள் எல்லோரும் கண்மூடிக் கொண்டிருப்பார்கள் என நினைக்கின்றார்கள் போல!

இன்று தகவல் தொழினுட்ப அறிவினால் உலகம் கிராமமாகச் சுருங்கி விட்டது. ஒரு தேசத்தின் சகல விடயங்களும் சமுத்திர எல்லைகள் கடந்து ஒரு நொடியில் உலகம் முழுதும் பரவி விடக் கூடிய இந்தக் கால கட்டத்தில் இனவாதிகளின்  செயல்கள் உலகமெங்கும் உடனடியாகவே வௌிச்சமிடப்பட்டு காட்டப்படுகின்றன.

1990ம் ஆண்டளவில் வடபகுதி முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக அவர்கள் தாயகத்திலிருந்து விரட்டப்பட்டபோது, அத்தகவல்கள் உலக மக்களின் பார்வைக்கு அன்றே எத்தி வைக்கப்படவில்லை.அதனால் இன்றும் அந்த மக்கள் அகதி அவலத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆனால் .....

பேருவளை , அழுத்கம சம்பவங்கள்.....

அம்முஸ்லிம் மக்களின் கண்ணீர்த்துளிகளை ஈரம் காயமுன்னரே உலகின் பார்வைக்குள் பரவ விட்டதால் இனவாதிகளின் குரோதம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.. இலங்கையில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் எனும் மனப்பதிவுகள் மீண்டும் புதுப்க்கப்பட்டு விட்டது.

அன்று  தமிழ் மக்கள்  இன வன்முறைக்கு    உட்பட்டபோது  பூகோளத்தில் வாழும் ஏனைய தமிழ்மக்களின் தமிழ்ப்பற்றும் அவர்களின் ஒற்றுமையும் ஆதரவும் இன்றுவரை இப்பிரச்சினையை சர்வதேச அரங்கிற்குள் உலாவவிட்டுக் கொண்டிருக்கின்றது..

அவ்வாறே முஸ்லிம் மக்களின் உயிர், உடல், உடமை பாதுகாப்புக்கு முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இப்போது குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பதும், முஸ்லிம் சில அரசியல்வாதிகளுக்கு இல்லாத சமூகப்பற்று முஸ்லிம் இளைஞர்களிடம் அதிகரித்து வருவதும் ஆரோக்கியமான விடயம்....

"எதிரியின் எதிரி நண்பன்' எனும் மனப்பாங்கில் மொழியால் ஒன்றிணைந்தவர்கள் தற்போதைய சூழ்நிலையை மையப்படுத்தி தம் குரோதத்தை வௌிப்படுத்துவதும் அநாகரிகமான மனிதாபிமானமற்ற செயலே!

உண்மையில் மொழியால் ஒன்றிணைந்த சிறுபான்மையினர் தமக்கெதிரான வன்முறைகள் அவிழ்த்து விடப்படும்போது அவற்றை எதிர்த்து மனவலிமையுடன் ஒன்றாக இணைந்து போராடுவதே காலத்தின் தேவையாகி நிற்கின்றது..

முகநூல் துளிகள் - 8




கடினமான செயல்களுக்கே எப்பொழுதும்
மதிப்பான வெற்றிகள் காத்திருக்கின்றன!
----------------------------------------------------------------------


நாம் நேசிக்கும் உறவை...
பிரியவிடாமல் காத்துக் கொள்ளுதல்கூட
"அன்பின் அதிகாரம்" தான்!
----------------------------------------------------------------------


நம் வாழ்வினோட்டம் 24 மணி நேரம் அடங்கிய கடிகாரப் பெட்டியின் ஓட்டத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது. ஏனெனில் நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தும்போது மன திருப்தி கிடைக்கின்றது. இதனால் நம் வெற்றிகள் கால வரலாற்றில் சொற்களாகப் பதிக்கப்படுகின்றது..

ஆனால்....

காலத்தை வீணாக்கும்போதும், காத்திருக்கும்போதும் நமது நேரம் மிக மெதுவாக செலவளிக்கப்பட்டு, நமது செயல்கள் மந்த நிலை்க்கு மாற்றப்படுகின்றது. இதனால் நாம் வெறும் கற்கள்போல் சமைந்து விடுகின்றோம்..

எனவே நாம் உருவாக்குவது......!

சொற்களா?
கற்களா?

தீர்மானிப்பாளர்கள் நாம்தான்!
------------------------------------------------------------------------



நம்பிக்கை என்பது வெறும் வரி வடிவமோ, அல்லது பேச்சொலிகளின் தொகுப்போ அல்ல..

மாறாக...

நம் அன்றாட வாழ்வில் தலைகாட்டும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகான நம்மைத் தூண்டச் செயவதுடன், நமது சக்தியை சாதனைகளாக மாற்றும் ஆசான்!

"நம்பிக்கை கொண்டோர் வாழ்வில்
தளம்பல் தோன்றுவதே இல்லை!
-------------------------------------------------------------------------



நமது ஒரு நிமிட கோபத் துடிப்புக்கள்தான் நரகத்தின் நுழைவாயில்..
ஏனெனில் கோபம் வந்தால் நம் வார்த்தைகளின் அகோரம் நமக்குப் புரியாது..பகைமைக்குள் அது நம்மைத் தள்ளி விடும்..

நாம் பிறர் மீது அன்பு கொண்டால் அதுதான் இன்பத்தின் திறவுகோல்..
ஏனெனில் அன்புதான் நம்மைப் பண்படுத்தி மனதைப் பசுமைப்படுத்தி வசந்தங்களை நம்முள் பரவச் செய்கின்றது.

எனவே......

கோபமோ.......அன்போ...

நாம் பேசும் வார்த்தைகள், செயல்களில்தான் இருக்கின்றது.

எனவே நாம் பேசும் வார்த்தைகள் நம்மைச் சார்ந்தோரை வசீகரிக்கட்டும்!! கோபத்தை விரட்டியடிக்கட்டும்!
------------------------------------------------------------------------



சிந்தனையின் அடிப்படையில் நம்மை உருவாக்குபவர்கள் நாம்..
செயல்களின் அடிப்படையில் நம் வாழ்வை வழிநடத்துபவர்கள் நாம்..
முயற்சியின் துடிப்பில் வெற்றிக்காக உழைப்பவர்கள் நாம்..
எனவே...
நம்மை நாம் உயர்வாகப் பார்க்கும்போது....
நமது முதல் நட்பும், வழிகாட்டியும் நாம்தான்!
-----------------------------------------------------------------------

மௌனம் ஓர் மொழிதான்.....
ஏனெனில் .......
பிறர் பேசுவதை  நாம் கேட்பதற்கான பயிற்சியை அது நமக்கு வழங்குகின்றது

-----------------------------------------------------------------------



ஒரு காரியத்தை உடனடியாகச் செய்ய ஆரம்பிப்பார் பலர்....
ஆனால்.....
சிலரேதான் தாம் தொடங்கிய காரியத்தை நேர்த்தியாகச் செய்து முடிப்பார்.
இவர்கள்தான் வெற்றிக்கான அடையாளங்கள்...

-----------------------------------------------------------------------


தோல்விகள்தான் நமக்குச் சவால்!
ஏனெனில்.....
தோற்றுப்போன ஒவ்வொரு கணங்களும் - நம்
வெற்றியைத் தூண்டும் அதிர்வுகள்!

--------------------------------------------------------------------



பிகாஸோவின் ஓவியம்.....
பீதோவின் இசைவரிகள்.....
இவற்றையும் விட நீ இனிமையானவன்!
ஏனெனில்......
நானுன்னை நேசிப்பதால்!


டயறி



டயறி
--------
டயறி என்பது நம் சந்தோசங்களின் திறப்பு...உணர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் உத்தம நட்பு...நம் இரகஸியங்களை தனக்குள் மாத்திரம் அடக்கி வைத்திருக்கும் ஆத்மார்த்த உறவு!

என்ன..ஆச்சரியமா இருக்கா?
தினமும் டைரி எழுதும் பழக்கமானது, பிற்காலத்தில் நம் ஞாபக மறதியைக் குறைக்கின்றது. அதுமாத்திரமன்றி நாம் சந்திக்கும் சவால்கள், இன்ப, துன்பங்களுக்கு அதில் வரிவடிவம் கொடுக்கும்போது நம் உணர்வுகளைப் பரிமாறிய திருப்தியும், நமது செயல்களை நாமே மதிப்பிடும் பக்குவமும், எழுத்தாற்றலும் ஏற்படுகின்றது..

ஆனால்......

பலர் டைரி என்பதை வெறும் தாள்களாக நினைத்து அதில் தமது சோகங்களையும், தோல்விகளை மாத்திரமே பதிவிடுகின்றனர்.

ஓர் உண்மையைச் சொல்லட்டுமா...???

சிறுவயதிலேயிருந்து எனக்கும் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. அப்பழக்கம்தான் பிற்காலத்தில் என் இலக்கிய வளத்தை மெருகூட்ட காரணமாக இருந்தது. அதுமாத்திரமின்றி எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை வெறும் எழுத்துக்களாக மாத்திரமன்றி உயிர்ப்புள்ள ஞாபகங்களாக மாற்றும் சக்தியும் இதற்குண்டு!

முகநூல் துளிகள் - 4




நமது கடந்தகால கசப்பான ஞாபகங்கள் நம் நினைவுத் தளங்களிலிருந்து அழிக்கப்பட வேண்டியவை. ஆனால் அவை கற்றுத் தந்த பாடங்கள், படிப்பினைகள் அனுபவங்களாக மாறி நிகழ்காலத்தை வழிநடத்துகின்றன. அப்போதுதான் நாம் நமது எதிர்கால வாழ்க்கையை நமக்கேற்றதாக மாற்ற முடிகின்றது..
--------------------------------------------------------------------------------



கடந்த காலத்தின் வினாக்குறிகளை....
நிகழ்காலம் மாற்றித் தருகின்றது ஆச்சரியக்குறிகளாய்!
எதிர்காலம் அவற்றைப் பதிக்கட்டும்
சாதனைக்குறிகளாய்!
--------------------------------------------------------------------------------


சாதாரணமாக, இலகுவாகக் கிடைக்கும் ஒவ்வொரு விடயங்களையும் பொருட்களையும் அலட்சிப்படுத்துகின்றோம்.

ஆனால் .........

நமக்கு தேவையேற்பட்டு தேடி அலையும்போதுதான் நம் அலட்சியத்தின் வெகுமதியாய் மனம் உணர்கின்றது துன்பத்தை!
----------------------------------------------------------------------------


ஒரு செயலைச் செய்கின்றோம். ஆனால் திருப்தி என்பது கிடைக்காமலே போகின்றது. ஏனெனில் ஒரு செயலை செய்து முடிக்கும்போதுதான் அது தொடர்பான வேறு சிந்தனைகளும் எழுந்து அச்செயல் புதுப்பிக்கப்படுகின்றது.

எனவேதான்.......

முன்னேற்றத்திற்கு முடிவென்பது கிடையாது. நாமதைத் தேடி ஓடுமபோதே கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நம்மைத் தேடி வருகின்றன!

--------------------------------------------------------------------------------


கிடைத்துள்ளதை வைத்து வாழ்க்கையை நன்றாக வாழ முயற்சிக்கும்போது ஏற்படுகின்ற மனநிறைவு நம் பலகீனத்தையெல்லாம் பலமாக மாற்றுகின்றது!