About Me

2014/07/25

முகநூல் துளிகள் - 4




நமது கடந்தகால கசப்பான ஞாபகங்கள் நம் நினைவுத் தளங்களிலிருந்து அழிக்கப்பட வேண்டியவை. ஆனால் அவை கற்றுத் தந்த பாடங்கள், படிப்பினைகள் அனுபவங்களாக மாறி நிகழ்காலத்தை வழிநடத்துகின்றன. அப்போதுதான் நாம் நமது எதிர்கால வாழ்க்கையை நமக்கேற்றதாக மாற்ற முடிகின்றது..
--------------------------------------------------------------------------------



கடந்த காலத்தின் வினாக்குறிகளை....
நிகழ்காலம் மாற்றித் தருகின்றது ஆச்சரியக்குறிகளாய்!
எதிர்காலம் அவற்றைப் பதிக்கட்டும்
சாதனைக்குறிகளாய்!
--------------------------------------------------------------------------------


சாதாரணமாக, இலகுவாகக் கிடைக்கும் ஒவ்வொரு விடயங்களையும் பொருட்களையும் அலட்சிப்படுத்துகின்றோம்.

ஆனால் .........

நமக்கு தேவையேற்பட்டு தேடி அலையும்போதுதான் நம் அலட்சியத்தின் வெகுமதியாய் மனம் உணர்கின்றது துன்பத்தை!
----------------------------------------------------------------------------


ஒரு செயலைச் செய்கின்றோம். ஆனால் திருப்தி என்பது கிடைக்காமலே போகின்றது. ஏனெனில் ஒரு செயலை செய்து முடிக்கும்போதுதான் அது தொடர்பான வேறு சிந்தனைகளும் எழுந்து அச்செயல் புதுப்பிக்கப்படுகின்றது.

எனவேதான்.......

முன்னேற்றத்திற்கு முடிவென்பது கிடையாது. நாமதைத் தேடி ஓடுமபோதே கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நம்மைத் தேடி வருகின்றன!

--------------------------------------------------------------------------------


கிடைத்துள்ளதை வைத்து வாழ்க்கையை நன்றாக வாழ முயற்சிக்கும்போது ஏற்படுகின்ற மனநிறைவு நம் பலகீனத்தையெல்லாம் பலமாக மாற்றுகின்றது!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!