
தீ ஜுவாலை அனலுக்கு மத்தியிலும் அல்ஹம்துலில்லாஹ்......!
அழகான பெருநாள் மலர்ந்துள்ளது. இருந்தும் வாப்பா எம்மை நீ விட்டு நீங்கி மூன்று வருடங்கள்! கண்கள் கருக்கட்டுகின்றது கண்ணீரைப் பிசைந்து
பிரிவு நீளும் போதுதான் நினைவுகளும் ஆழமாக ஊடுறுவி நிற்கின்றது போலும். மனதில் வாப்பாவும் பெருநாள் ஞாபகங்களினூடாக இன்றும் பயணிக்கின்றார் என்னோடு!
பெருநாளை உயிர்ப்பிக்கும் அன்புள்ளங்களின் வாழ்த்துக்கள் இன்றும் என் மனதில் ஈரம் சேர்க்கின்றது. இந்த வருடம் என் பள்ளி நட்புக்களின் தோழமை வாழ்த்துக்களையும் சுமந்து பயணிக்கின்றேன். வாழ்த்து வாசத்தினூடு அன்பு பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்.
- Jancy Caffoor-
06.04.2019