About Me

2019/06/01

இனி

யாரோ கல்லெறிகின்றார்கள்  - என்
௨ணர்வுக் குளவிகள் கலைகின்றன!

ஈமானிய வாசங்களை நுகர்ந்தோம்
ஈட்டிகளை பாய்ச்சுகின்றனர் விசமமாய்!

நெருப்பு வளையங்களை முத்தமிட்டே
நெஞ்சக்கூடு வெந்து போகிறது!

அன்றும் விரட்டப்பட்டோம் அகதிகளாய்
இன்றும் இம்சிக்கப்படுகிறோம் இதயம் இற்றுவிட!

நேசங்கள் ௨திர்த்தே தேசம் தொலைத்தோம்
பாசங்கள் இல்லாத பல மனிதர் கண்டோம்!

விமர்சிக்கிறார்கள் வில்லர்களாக்கி
விடியலை விரட்டும் இருளாக்கி!

யாரோ தீ கக்கினார்கள் அன்று
இன்றோ எம் சுவாசத்தில் கரும் புகை!

வஞ்சம் நீள்கிறது அழகாய்
நெஞ்சப் பாறை உருகுகிறது கண்ணீரால்!

புன்னகைகளை புதைத்து விட்டோம்
புதைகுழியில் சதியின் பெயரால்!

இனவாதம் நீள்கிறது மூச்சு வேர்களில்
இனி பூக்குமோ அமைதி வாழ்வோரங்களில்!

- Jancy Caffoor -
   

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!