சொல்லுக்குள் செதுக்கும் இலக்கணச் சுவையால்/
தொல்காப்பியம் முகிழ்த்ததே பசும் தமிழாய்/
முத்தமிழின் முத்திரையில் அகமும் எழிலாகி/
தித்திக்குமே அமிர்த வாசம் பரப்பி/
திக்கெட்டும் உயிர்த்தெழட்டும்; காவியங்கள் வாழ்வாக/
எழுத்தாகி நீயும் வாழ்ந்து காட்டு/
ஜன்ஸி கபூர்
2020/07/03
நிழல்கள்
எத்தனை இரவுகள் எரிமலை வெடித்தன
எரிந்த கனவுகளும் எரிவாயுவில் கசிந்தன
சத்தங்களின் முழக்கங்களே சதியுடன் ஆண்டன
சந்ததிகள் சரிந்தன சகதித்திரையில்
யுத்தம் என்றனர் யுகத்தை அழித்தனர்
நித்தமும் துயரை நினைவோரம் விதைத்தனர்
சத்திய மாந்தர் சடுதியில் மறைந்தனர்
சித்தம் கொன்றனர் சிரிப்பும் தொலைந்தது
அழகான வாழ்வும் அழிந்தேதான் போனது
அகதி என்றனர் அவலம் நிரப்பினர்;
அகில இருப்பிற்குள் அடைக்கலம் தேடியே
அனாதையானோம் சோகம் சுமையாய் தொடருதே
கண்ணோரக் கனவின் கண்ணீர்க்கதை தானே
காயம்பட்ட வடுவாய் காலத்தோடு வாழும்
நிழலாய்த் தொடரும் நினைவுகள் யாவுமே
பழகிய சுவடுகளைப் பக்குவமாய்க் காட்டுமே
ஜன்ஸி கபூர்
எரிந்த கனவுகளும் எரிவாயுவில் கசிந்தன
சத்தங்களின் முழக்கங்களே சதியுடன் ஆண்டன
சந்ததிகள் சரிந்தன சகதித்திரையில்
யுத்தம் என்றனர் யுகத்தை அழித்தனர்
நித்தமும் துயரை நினைவோரம் விதைத்தனர்
சத்திய மாந்தர் சடுதியில் மறைந்தனர்
சித்தம் கொன்றனர் சிரிப்பும் தொலைந்தது
அழகான வாழ்வும் அழிந்தேதான் போனது
அகதி என்றனர் அவலம் நிரப்பினர்;
அகில இருப்பிற்குள் அடைக்கலம் தேடியே
அனாதையானோம் சோகம் சுமையாய் தொடருதே
கண்ணோரக் கனவின் கண்ணீர்க்கதை தானே
காயம்பட்ட வடுவாய் காலத்தோடு வாழும்
நிழலாய்த் தொடரும் நினைவுகள் யாவுமே
பழகிய சுவடுகளைப் பக்குவமாய்க் காட்டுமே
ஜன்ஸி கபூர்
2020/07/02
மர்ம முடிச்சுக்கள்
என்னதான் நடந்ததுவோ ஏனிந்த மாற்றங்களோ
கண்பட்டுப் போனதுவோ நெறியும் பிறழ்ந்ததுவோ
எண்ணங்களில் திட்டமில்லை ஏற்றிவிடத் துணிவுமில்லை
வண்ணக் கனவுகளுமே கானலாய் பூக்குதிங்கே
பெற்ற அறிவும்தான் விலையாகுது வெளிநாட்டில்
கற்ற கல்வியோ சான்றிதழால் எடை கூடுது
தொற்றைப் பரப்புகிறது விஞ்ஞானம் அஞ்சாது
காற்றும் மாசோடு கலந்தே மகிழ்கிறது
''சீ' தனமே மேடை முழக்கம் வெடித்திடும்
சீதனத் திமிரும் சீர்திருத்தம் தானென்றே
வேதனமாய் பூமிக் அளிப்பார் முதிர்கன்னியரை
சாதனைச் சிரிப்போடு பாவங்கள் சுமந்திடுவார்
தெய்வம் வாழ்ந்த மனிதங்களெல்லாம் தன்னலம்
தெறிக்க மாக்களாகி மறைந்தே போகின்றனரே
இப்புவி வாழ்க்கையின் மர்ம முடிச்சுக்களே
அவிழத்து விடுமோ போதிமரத்துப் பறவைகள்
ஜன்ஸி கபூர்
கண்பட்டுப் போனதுவோ நெறியும் பிறழ்ந்ததுவோ
எண்ணங்களில் திட்டமில்லை ஏற்றிவிடத் துணிவுமில்லை
வண்ணக் கனவுகளுமே கானலாய் பூக்குதிங்கே
பெற்ற அறிவும்தான் விலையாகுது வெளிநாட்டில்
கற்ற கல்வியோ சான்றிதழால் எடை கூடுது
தொற்றைப் பரப்புகிறது விஞ்ஞானம் அஞ்சாது
காற்றும் மாசோடு கலந்தே மகிழ்கிறது
''சீ' தனமே மேடை முழக்கம் வெடித்திடும்
சீதனத் திமிரும் சீர்திருத்தம் தானென்றே
வேதனமாய் பூமிக் அளிப்பார் முதிர்கன்னியரை
சாதனைச் சிரிப்போடு பாவங்கள் சுமந்திடுவார்
தெய்வம் வாழ்ந்த மனிதங்களெல்லாம் தன்னலம்
தெறிக்க மாக்களாகி மறைந்தே போகின்றனரே
இப்புவி வாழ்க்கையின் மர்ம முடிச்சுக்களே
அவிழத்து விடுமோ போதிமரத்துப் பறவைகள்
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Posts (Atom)