வெட்டவெளியும் கொதிக்கிறதே அனலுமிங்கே பாலைவனமாய்/
வெம்மைக்கதிர் தணிக்கதான் கரமேந்தும் குடையைத்தான்/
வெட்கப்படு மனிதா வெட்டுகிறாய் மரங்களைத்தான்/
வேரோடும் உயிரிக்குள்ளே வேதனைதானே இறைவா/
வரமான மரங்களெல்லாம் வனப்பான வளங்கள்தானே/
வேரறுத்தே வீழ்த்துகின்றோம் வறட்சியை விதைத்தபடி/
நலனுக்கேற்ற விருட்சக்குடை நமக்கிருக்கு நிழலுக்காக/
அலைந்தோடுகிறோம் வெப்பம் தணிக்க நோயேந்தி/
மொய்க்கின்ற மழையும் மோதுகிற காற்றும்/
பெயர்த்துவிடும் மண்ணைத்தான் பூமியையும் நகர்த்தியபடி/
பசுமையைக் காத்திடவே விதைகளை வளர்த்தெடுப்போம்/
இயற்கைக்குள் இதயங்களை இணைத்தேதான் மகிழ்ந்திடுவோம்
ஜன்ஸி கபூர்
2020/07/13
2020/07/12
நியாயத் தராசு
நீதி தேவதையின் நியாயத் தராசே/
சாதி பேதமின்றி வழங்கிடு நீதியை/
வாதங்கள் வெடிக்கும் பூவும் புயலுமாய்/
அக்கிரமத்தின் எடையை உடைத்திடு துணிந்து/
ஆணவமும் அநீதியும் கேட்டின் கண்கள்/
ஆணையிட்டே அறுத்தெறியட்டும் உனது வாளும்/
வன்புணர்வும் வன்முறையும் வக்கிரச் சூழ்ச்சியாம்/
தண்டிக்கத் தயங்காதே கரமேந்திய தர்மத்தால் /
நிமிர்ந்தே சொல் நியாயம் வெல்லட்டும்/
நிம்மதி பூத்தே மானுடமும் மகிழட்டும் /
தீயோரைக் கொழுத்திடும் தீயும் நீயே/
தீன்சுவை தடவும் அமிர்தமும் நீயே/
விதியின் பாதையில் எழுதப்படும் பொய்கள்/
விரண்டோடட்டும் சட்டக் கோப்பின் யாப்புக்கண்டே/
மிரண்டோடட்டும் கயவரும், கலியுலக மன்னர்களும்/
கரமிரண்டும் காத்து நிற்கட்டும் நீதியைத்தான்/
ஜன்ஸி கபூர்
சாதி பேதமின்றி வழங்கிடு நீதியை/
வாதங்கள் வெடிக்கும் பூவும் புயலுமாய்/
அக்கிரமத்தின் எடையை உடைத்திடு துணிந்து/
ஆணவமும் அநீதியும் கேட்டின் கண்கள்/
ஆணையிட்டே அறுத்தெறியட்டும் உனது வாளும்/
வன்புணர்வும் வன்முறையும் வக்கிரச் சூழ்ச்சியாம்/
தண்டிக்கத் தயங்காதே கரமேந்திய தர்மத்தால் /
நிமிர்ந்தே சொல் நியாயம் வெல்லட்டும்/
நிம்மதி பூத்தே மானுடமும் மகிழட்டும் /
தீயோரைக் கொழுத்திடும் தீயும் நீயே/
தீன்சுவை தடவும் அமிர்தமும் நீயே/
விதியின் பாதையில் எழுதப்படும் பொய்கள்/
விரண்டோடட்டும் சட்டக் கோப்பின் யாப்புக்கண்டே/
மிரண்டோடட்டும் கயவரும், கலியுலக மன்னர்களும்/
கரமிரண்டும் காத்து நிற்கட்டும் நீதியைத்தான்/
ஜன்ஸி கபூர்
தனிமை
தூரத்து நிலவும்////
தூங்காத விண்மீன்களும் துணையிருக்கும்////
விடியாத இருட்டும் அருகிருக்க////
மனதுக்குள் ஏது தனிமை////
ஜன்ஸி கபூர் - 12.07.2020
தூங்காத விண்மீன்களும் துணையிருக்கும்////
விடியாத இருட்டும் அருகிருக்க////
மனதுக்குள் ஏது தனிமை////
ஜன்ஸி கபூர் - 12.07.2020
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சித்திரமே சிந்தையினிக்கும் இனிய செல்லமே
முத்தேயுன் நகையழகில்; மயங்கித்தான் போனேனடி
மாதுளம் பூச்சாற்றில் ஊறிய உதட்டோரம்
மழலைத் தமிழெடுத்தே மயக்குவாய் பல பேரை
மங்காத குறும்புகளால் மனசைத்தான் கிள்ளிடுவாய்
நீங்காத நினைவோட்டத்தின் நினைவும் நீயாய்
குறுநகை சிந்தி குதூகலித்த வதனம்
குதூகலம் சிந்தி பலரை ஈர்க்கும்
குயிலின் நாதமாய் ஒலிரும் குரலாலே
பழகும் மாந்தரும் சொக்கித்தான் போவாரடி
சிட்டாய்ப் பறக்கும் குட்டியே
எட்டு வயதோ உனக்குள்
பட்டுப் பூக்களால் தூவியுன்னை வாழ்த்துகிறேன்
கட்டிப் போடும் அன்போடு பல்லாண்டு வாழ்கவே
இத்தனை அழகோடு இன்றைய நாளினில்
இனிதாய் பூத்திட்ட இனிய நிலா சஹ்ரிஸிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உமம்மா குடும்பத்தினர் - (ஜன்ஸி கபூர்) - 12.07.2020
Subscribe to:
Posts (Atom)