உழைப்பின் மூச்சினில் ஊதிப் பருத்திடும்
ஏழை வியர்வையும் காற்றினில் கலந்திடும்
தழைத்திடும் வாழ்வும் செழித்தே மலர்ந்திட
அழைப்பார் விலை கொடுத்திட ஊதும்பைக்கே
பிஞ்சு மனங்களின் கொஞ்சும் விரல்கள்
கெஞ்சி வருடும் காற்றுப்பை மேனிதனை
அஞ்சிடாமல் அசைந்திடும் தென்றல் சுகத்தினில்
நெஞ்சமும் நிறையுதே வானவில் வர்ணங்களில்
விழிகளின் சுகத்தினிலே அழுகின்றதே இயற்கையும்
பழியாகுமோ சூழலும் இறப்பர் மாசினால்
அழிகின்றதே பண்பாடும் காற்றுப்பை கலாசாரத்தினால்
செழிக்கட்டுமினித் தரணியும் பசுமை யலங்காரங்களால்
ஜன்ஸி கபூர்
