About Me

2020/07/21

பொங்கு தமிழ்

அமுதத் தமிழை அன்பால் மொழிந்தே
அகிலம் வியக்க ஆளும் தமிழா
அண்டம் கேட்கும் வீர முழக்கம்
அஞ்சா நெஞ்சம் உந்தன் மகுடம்

பொங்கு தமிழ் எங்கும் தமிழாய்
வங்கக் கடலும் ஓங்கி ஒலிக்கும்
எங்குமுள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
சங்கே முழங்கு பகைவர்கள் மறையட்டும்

கொடுமை காணுகையில் கொன்றொழி அதர்மம்
நடுநிலை கொண்டேதான் நானிலம் காத்திடு
தடுமாறி வீழ்ந்திடாமல் தடைகளு முடைத்தே
நாடும் செழித்திட நல்லுரமாய் உழைத்திடு

வஞ்சகர் நெஞ்சினைப் பிளந்திடு வாய்மையால்
கொஞ்சிடு முறவுதனை நல்லறமாய்ப்  போற்றிடு
வெஞ்சினம் கொள்வாய் பெண்பித்தர் முன்னாலே
நெஞ்சத்தை நிமிர்த்திடு தமிழனாய் வாழ்ந்திட

ஜன்ஸி கபூர் - 20.07.2020
யாழ்ப்பாணம்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!