About Me

2020/07/21

புத்தம்புதுக் காலையிலே நித்தம் காத்திருக்கேன் அத்தமகளே உனக்காக பூத்திருக்கேன்

 
புத்தம்புதுக் காலையிலே நித்தம் காத்திருக்கேன்/
அத்தமகளே உனக்காக பித்தாகப் பூத்திருக்கேன்/
சித்தமெல்லாம் உருகுதடி உந்தன் அழகாலே/
உத்தமியே உசுருக்குள்ளே உன்னைத்தானே பூட்டினீயே/

கடலோரக் காற்றி லுந்தன் வாசமெல்லாம்/
கவிதையாக வீழுதடி நனையுதே மனசும்தான்/
கனவோரம் உயிர்க்குதடி நினைவெல்லாம் சுகமாய்/
கட்டியிழுத்தாய் காலமெல்லாம் கூடி வாழ/

நாணம் சிந்தும் நளின விழியினிலே/
நானும் சிறைபட்டேனே நிழலாய்த் தொடர/
நாவுதிர்க்கும் அமிர்தமே சுவைக்கத் துடித்தேனே/
நாளுமே உனக்காக ஏங்கித் தவித்தேனடி/

நடக்கு முன்னழகிலே அன்னமும் தோற்குதடி/
குடமேந்தும் வளைவினிலே துடிக்குதடி வயசும்தான் / 
விடமும் அமிர்தம்தானே நீ தொட்டதனாலே/
அடம்பிடிக்காதே  நாள்குறி நாம வாழத்தான்டி/

ஜன்ஸி கபூர் 






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!