கொட்டமடிக்கும் கொரோனாவால் வாட்டத்திலிங்கு மாந்தரும்
திட்டமிட்டே ஏறுது விலைவாசியும் இமயமாக
நீட்டிடும் பணத்திற்கே நிறையுது கூடைகளும்
பட்டினி வயிரெல்லாம் வெறுமையில் சிதையுது
வீட்டுச் சிறையினில் வாழ்வும் பதுங்கிடவே
தட்டுப்பாடென்ற மாயையினில் நட்டுகின்றனரே கொள்ளையைத்தான்
கட்டுப்பணம் கறந்தாலே கைமாறும் பசியடங்க
கேட்கத்தான் நாதியில்லை பதுங்கிடுதே பொருட்களும்தான்
நீளுகின்ற ஊரடங்கை வசப்படுத்தும் முதலைகள்
மாளுகின்றன உயிர்கள்தான் தொற்றுடன் விலைவாசியால்
தளும்புகின்ற சோகங்கள் நெறிக்கின்றதே குரல்வளையை
ஆளுகின்ற கொள்ளையிதை மதிதான் மாற்றிடுமோ
ஜன்ஸி கபூர்