About Me

2020/08/04

மனைமாட்சி

 மங்களம் வந்தமரும் நல் மனைமாட்சியில்
பொங்குமே புன்னகையும் குங்குமச் செழிப்பினில்
இல்லறத்தின் நற்பயனை இல்லமே சுவைத்திட
நல்லமுதாய் காத்திடுவாள் தன் குலத்தினையே

ஆண்மையும் பெண்மையும் இசைந்திடுமே இல்லறமாய்
எண்ணமும் வசமாகும் வாழ்வின் சிறப்பினில்
கண்ணாளன் கருத்தினில் கலந்திடும் நல்மனையாள்
தொண்டெனவே ஊறிடுவாள் தன் உறவுகளுக்கே

சொற்களைக் கலப்பாள் நாவடக்கமும் சுவையாகும் 
கற்பின் செழுமையினில் பண்பும் உயர்வாகும்
வள்ளுவன் வாக்கோடு தன்னையும் கோர்த்தே  
மங்களப் பேருவைகையால் வாழ்த்திடுவாள் மனையை  

இகழ்ந்திடார் அறிந்தோர் இதயத் தினன்பை 
புகழும் மணக்கும் வாழ்ந்திடும் வாழ்வினில்
அகமும் மகிழும் அணிகலனாய் மக்கற்பேற்றுடன்
அகிலமும் போற்றுமே அவள் மனையாட்சியை

ஜன்ஸி கபூர்  



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!