செந்தமிழ் பிழிந்தூற்ற இலக்கணமும் யாப்பேற்றும்/
வந்தமர் சந்தனமாய் இலக்கியமும் நறுமணத்தில்/
சிந்தைக்குள் அலைகின்ற வாழ்வியல் தொகுப்பெல்லாம்/
வந்தமருமே சொற்களும் கசிந்தோடும் கற்பனைக்குள்/
கற்றோர் கல்லாதோர் கனிந்திடுவார் சுவைக்கையிலே/
காத்திடுவோம் உதிராமல் இலக்கியப்பூக்களை உயிர்ப்புடனே/
ஜன்ஸி கபூர் - 12.08.2020

