பாரத தேசத்தின் நேசகர் ஆனவர்/
தாரக மந்திரமாக கல்லாமை நீக்கியவர்/
மனிதருள் மாணிக்கம் கனிவின் வித்தகர்/
தனித்திருந்து கடமைகளை கருத்தோடு செய்தவர்/
பட்டங்கள் பெறாமலே சட்டங்கள் சொன்னவர்/
திட்டங்கள் தீட்டியே மனங்களை வென்றவர்/
குடும்பமாக தேசமே உயிர்க்கவே உரமாகியவர்/
தடுமாறும் ஏழைக்கே தாய்மையில் நின்றவர்/
விரிந்த தேசமே விரும்பிட நின்றார்/
விருட்சமாகி கல்விக்குள் சேவைகள் புரிந்தார்/
சமத்துவம் பேணி சார்ந்திட்டார் அன்பில்/
சரித்திர பூமியை சொர்க்கமாகவே மாற்றினார்/
ஜன்ஸி கபூர்

