About Me

2020/08/14

விட்டோடுதல் தகுமோ

 


விழிகளின் கனவெல்லாம் விழிநீரில் கரைந்திடுமோ

தழுவிடத் துணையுமில்லை தணிந்திடாத கோபத்தால்

வழக்கின் பிடிக்குள் அழகான இல்லறம்

வழிகின்ற சோகம்தான் எதிர்காலத் துடிப்பாகுமோ


கருத்தோடு இசைந்தே வாழ்ந்திட்ட வாழ்வும்

உருச் சிதைந்ததோ மனமும் புரிந்துணர்வின்மையால்

எதிர்த் துருவமாக சிறகடிக்கும் அன்பே

அருகமர்ந்து பேசினாலே மிரண்டோடும் பிணக்கெல்லாம்

 

விட்டுக்கொடுத்தாலே விலகிடும் முரண்பாடெல்லாம்

தட்டிக் கொடுத்தாலும் தாம்பத்தியம் மகிழ்ந்திடும்

கட்டிய மாங்கல்யம் தொட்டணைத்த குழந்தைகளை

விட்டோடுதல் தகுமோ பெற்றவர்கள் துணையின்றி


ஜன்ஸி கபூர்  

 



 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!