திக்கின்ற ஏழ்மைக் கனவுகள்/
நியாயமின்றி மகண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையின்/
எண்ணத்திலும் புண்ணாகும் சட்டத்துள் துளையிருந்தால்/
அநீதிகள் ஆளப்படுகையில் நீதியும் கூண்டுக்குள்/
அதிகார வதையினில் அனலுக்குள் நேயமே/
நீதிமன்றம் மிறைந்திடும் கல்லறைக்குள் கலிகாலமே/
சூழ்நிலைச் சாட்சிகள் சூது பரப்புகையில்/
ஆழ்நிலைச் சிந்தனைகள் நெறிக்குள் தெறித்திடுமே/
கைவிலங்குகள் அரணாகும் நொடிப் பொழுதினில்/
நம்பிக்கையும் அறுந்திட விடுதலையாவார் கணத்தினிலே/
மனிதத் தீர்ப்புக்கள் வேடத்தினால் வெளிறுகையில்/
மனசாட்சியாக ஒலித்திடுமே இறை தீர்ப்புமே/
ஜன்ஸி கபூர்