About Me

2020/09/03

மழைக் காலக் காதல் ஒன்று

தரையில் நொருங்குகின்ற மழைப் பூக்களும்/

கரைகின்றதே மேனியில் உறவின் ஏக்கத்தினில்/

திரை போடா மோகத்தின் சிலிர்ப்பினில்/

வருடுகின்றனவே கரங்களும் இடைத் தளிரை/


விரைகின்ற தென்றலும் அசைக்கின்ற குடைதனில்/

வரைகின்றதே நீரும் வசந்தத்தின் ஈர்ப்பினை/

மயங்கிடும் உள்ளங்களின் மகிழ்வுப் பயணமதில்/

தயங்கிடுமோ கால்களும் தனிமைக்குள் நனைந்திடவே/


விழி அழகின் விருந்தோம்பலாய்க் காதலை/

சுவைக்கின்றதே அன்றில்களின் ஆனந்த இதயங்கள்/


ஜன்ஸி கபூர் - 03.09.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!