About Me

2020/09/03

நீதியும் தீர்ப்பும்

திக்கின்ற ஏழ்மைக் கனவுகள்/

நியாயமின்றி மகண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையின்/ 

எண்ணத்திலும் புண்ணாகும் சட்டத்துள் துளையிருந்தால்/

அநீதிகள் ஆளப்படுகையில் நீதியும் கூண்டுக்குள்/

அதிகார வதையினில் அனலுக்குள் நேயமே/  


நீதிமன்றம் மிறைந்திடும் கல்லறைக்குள் கலிகாலமே/

சூழ்நிலைச் சாட்சிகள் சூது பரப்புகையில்/

ஆழ்நிலைச் சிந்தனைகள் நெறிக்குள் தெறித்திடுமே/


கைவிலங்குகள் அரணாகும் நொடிப் பொழுதினில்/

நம்பிக்கையும் அறுந்திட விடுதலையாவார் கணத்தினிலே/

மனிதத் தீர்ப்புக்கள் வேடத்தினால் வெளிறுகையில்/

மனசாட்சியாக ஒலித்திடுமே இறை தீர்ப்புமே/


ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!