சூழ்நிலைகள் நம்மை
அரவணைக்கும்போது நாமும் அதற்கேற்றாற் போல் வளைந்து கொள்கின்றோம். இயல்போடு
பிசைந்து செல்லும் வாழ்வில் சிறு தடைகள் போதும் நம்மைப் புரட்டிப் போட!
ஏனெனில்!
எண்ணங்களின் அசைவில் நகர்ந்து கொண்டிருக்கின்ற நம் மனங்களில் சிறு தடங்கல்
ஏற்படும்போது நமது பயணங்களும் இயல்போட்டங்களிலிருந்து தளர்ந்து விடுகிறது.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் அழகிய எதிர்பார்ப்பில் தரிசித்து
நிற்கின்றது. ஆனாலும் நாம் எதிர்பாராத தடைகள் காரணமாக மனம் பின்னோக்கி ஏமாற்றத்தின்
பிடிக்குள் சிக்கி விடுகின்றோம். பலம் பலகீனமாக மாறும்போது நம்பிக்கைகளும்
தோற்றுவிடுகின்றது.
இருந்தும்!
ஒவ்வொரு தடையும் சவால்களின் மறு வடிவம் என மனசு அங்கீகரிக்கும்போது முட்களுக்கிடையே பயணிக்கும் மனோ வலிமை பிறக்கிறது நம்முள்!
- Jancy Caffoor-
06.04.2019