About Me

2020/07/20

கலைகளின் இதயம்


இலக்கியங்கள் கலைக்கூற்றின் ஊடக மொழியே/
கலந்திடும் உணர்வுகளும் மரபால் அழகாகும்/
உலகக் கலைகளின் உன்னத தளமாய்/
துலங்கிடுதே மாந்தரின் வாழ்வோடும் பிணைந்தே/

ஜன்ஸி கபூர்  
 


காற்று வெளியிடைக் கண்ணம்மா


காற்று வெளியிடைக் கண்ணம்மா உந்தன்
காதல் என்னுள் பிறக்குதுதடி இசையா
கனவும் தீன்சுவையாய் உறவாடும் மனதோடு  
கற்பனையும் உயிர்க்குதடி உந்தன் அன்பாலே

உந்தன் விழிகளிரண்டும் எழிலோவியமே
சிந்தும் உன்மேனியும் தங்கச்சிலையே
வந்தேன் உன் னிழலாய்   தினம் தினமே
தந்தேன்  என்னையே உன்னிடத்தில் காதலுடன்

திரை விரிப்பாய் நாணத்தால் எனையும் ரசித்தே
வரைந்திடுவாய் எனையே உந்தன் கூர்விழியாலே
கரையுமோ கற்கண்டும் உந்தன் சுவைப் பேச்சாலே
தரையுமே ஒளிருதே தங்கமுந்தன் சுவடாலே

வட்டநிலாவே நீயும் பிழிகின்றாய் அமிர்த மொழியே 
தொட்டணைத்தால் தென்றலும் முறைத்தே விரட்டுதே
மனசோரம் ஒளிர்கிறாய் மின்னலாய் வீழ்ந்தே
மங்களமாய் இணைந்திட்டாய்   என் இல்லறமாக


ஜன்ஸி கபூர்  


மனிதர்கள் ஏன் மகிழ்ச்சியே நோக்கி மட்டும் பயணிக்க விரும்புகிறார்கள்

வாழ்க்கை என்பது நீண்ட தேடல். ஓவ்வொருவரும் தமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் வெற்றி பெற வேண்டுமென்றே எதிர்பார்ப்புடனே பயணிப்பதால் மகிழ்ச்சியை அடிமனம் விரும்புகின்றது. மகிழ்ச்சியும் ஒரு ஊக்கம் தருகின்ற உணர்வுகளே. மகிழ்வான மனநிறைவில் செயல்களை விருப்புடன் செய்வதால் இலகுவாகவும் தவறின்றியும் செய்ய முடிகின்றது. ஏனெனில் மகிழ்வு உற்சாகத்தின் உந்தலாகும். ஒரு மனிதன் தன்னை உற்சாகமாகத் தேடி அனைத்துக் காரியங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு   மகிழ்ச்சி அவசியமாகின்றது.

அகமகிழ்வின் ஆற்றல் வெற்றியில் குவிகிறது என்பது திண்ணம்

ஜன்ஸி கபூர் 

திகில் பயணம்

 வெண்பனி சூழ்ந்திடும் வெள்ளிடை மலையை
வெருட்டிடும் ஆதவன் வெம்மைக் கதிர்கள்
உருகிடும் பனியால் உறையுது நீரும்
துருவத்தின் குளிர்மையில்  விறைக்குது படகும்

நடுங்கும் குளிரோடையில் துடிக்குது படகும்
தடுமாறும் மனங்களும் தவிக்குது வலியில்
இடுக்கண் தந்திட்ட  இயற்கையின் எழுச்சி
வடுவொன்றைத் தந்தே  வாழ்வாகிப் போனது

மலை தழுவும் அழகு  நீரோட்டமே
விலையில்லா உயிர்களுக்கது மரண போராட்டமாம்
தள்ளாடும் படகும் தாங்கிடும் மாந்தர்
உள்ளத்தின் வலிமை கரையொதுக்கி களிப்பூட்டும்

ஜன்ஸி கபூர்