About Me

2020/07/20

காற்று வெளியிடைக் கண்ணம்மா


காற்று வெளியிடைக் கண்ணம்மா உந்தன்
காதல் என்னுள் பிறக்குதுதடி இசையா
கனவும் தீன்சுவையாய் உறவாடும் மனதோடு  
கற்பனையும் உயிர்க்குதடி உந்தன் அன்பாலே

உந்தன் விழிகளிரண்டும் எழிலோவியமே
சிந்தும் உன்மேனியும் தங்கச்சிலையே
வந்தேன் உன் னிழலாய்   தினம் தினமே
தந்தேன்  என்னையே உன்னிடத்தில் காதலுடன்

திரை விரிப்பாய் நாணத்தால் எனையும் ரசித்தே
வரைந்திடுவாய் எனையே உந்தன் கூர்விழியாலே
கரையுமோ கற்கண்டும் உந்தன் சுவைப் பேச்சாலே
தரையுமே ஒளிருதே தங்கமுந்தன் சுவடாலே

வட்டநிலாவே நீயும் பிழிகின்றாய் அமிர்த மொழியே 
தொட்டணைத்தால் தென்றலும் முறைத்தே விரட்டுதே
மனசோரம் ஒளிர்கிறாய் மின்னலாய் வீழ்ந்தே
மங்களமாய் இணைந்திட்டாய்   என் இல்லறமாக


ஜன்ஸி கபூர்  


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!