About Me

2020/07/20

திகில் பயணம்

 வெண்பனி சூழ்ந்திடும் வெள்ளிடை மலையை
வெருட்டிடும் ஆதவன் வெம்மைக் கதிர்கள்
உருகிடும் பனியால் உறையுது நீரும்
துருவத்தின் குளிர்மையில்  விறைக்குது படகும்

நடுங்கும் குளிரோடையில் துடிக்குது படகும்
தடுமாறும் மனங்களும் தவிக்குது வலியில்
இடுக்கண் தந்திட்ட  இயற்கையின் எழுச்சி
வடுவொன்றைத் தந்தே  வாழ்வாகிப் போனது

மலை தழுவும் அழகு  நீரோட்டமே
விலையில்லா உயிர்களுக்கது மரண போராட்டமாம்
தள்ளாடும் படகும் தாங்கிடும் மாந்தர்
உள்ளத்தின் வலிமை கரையொதுக்கி களிப்பூட்டும்

ஜன்ஸி கபூர்   


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!