About Me

2020/07/26

கையில் மிதக்கும் கனவே



பட்டுச்சேலைச் சிறகும் இதமாய் வருடும்
கட்டுடலும் பிழியும் கரும்புச் சுவையும்
வெட்கப்பட்டே துடிக்கும் மென்னுடல் சிலிர்ப்பும்
தொட்டவன் எந்தன் கைச்சிறைக்குள் சுகமாக

உந்தன் கொஞ்சும் விழிகள் அசைகையில்
எந்தன் மனமும் இசைந்திடுதே உன்னோடு
சந்தன மலருன் துடிக்கு மிடையும்
காந்தமாக ஈர்க்குதடி எந்தன்  மனசைத்தான்

கண்ணில் அமுதமும் இதழில் மையலுமாய்
என்னை மயக்கியே ஆளுறே பொழுதைத்தான்
உன்னைக் காணாத என்னிழலும் அனலாய்
உருகித் தேடுமடி உந்தன் அன்பைத்தான்

காதல் பிழிந்தே மிதந்தாய் அமுதாய்
காத்திருக்கும் பொழுதும் உருகும் துடிப்பாலே
கையில் மிதக்கும் கனவே கற்கண்டே
மெய்யன்போடு வாழ்ந்திடலாம் சுகமாய் நாமும்

ஜன்ஸி கபூர்  



சிந்தனை செய் மனமே



சிந்தனை செய் மனமே நித்திலமே/
வந்துன்னை வாழ்த்தும் பணி செய்திடவே/
தந்திர மாந்தரும் தோன்றிடுவார் முன்னாடி/
சிந்தித்தே திட்டமும் வகுத்திடு வாழ்ந்திட/

பகையும் மறந்து  புகையும் துறந்தே/
வாகை சூடிடும் இலக்குடன் பயணித்திடு/
நாடும் வீடும் முன்னேற உழைத்திடு/
தேடிடு நல்லுறவுகளுடன் நலமான வாழ்வையும்தான்/

ஜன்ஸி கபூர்
 
  •   


தாலாட்டு


ஆராரோ ஆரிவரோ கண்ணே நீயுறங்கு
நீயுறங்கு செல்வமே அன்னையின் அன்பாலே
அன்பாலே அணைத்திடுவேன் என்னவனும் நீதானே
நீதானே என்னுயிர்  நிம்மதியாய் கண்ணுறங்கு

- ஜன்ஸி கபூர் -

பூத்துக் குலுங்கும் பொன்னியிவள்

 

குண்டுமல்லி தேனூற்றும் கூந்தல் அலைவில்/ 
வண்ணப்பூச்சிகள் மொய்த்து விழும் விழிகள்/
தீண்டும் மருதாணிச் சாற்றிலுரசும் இதழ்கள்/
வண்ண நிலாவின் உருத்தானோ பொன்னியிவள்/

பட்டுச்சேலை மோதி யுடைக்கும் தென்றலைத்தான்/
பட்டுவிரலும் தொட்டாலோ விரியும் மொட்டுக்களும்தான்/   
கட்டுடம்பும் கருவாய் இசைந்திடும் கவிக்கே/
எட்டுத்திக்கும் பிழிந்திடும் அமிர்தமே பொன்னியவள்/

ஓத்தையடிப் பாதையிலே காத்திருக்கும் மச்சானும்/
நெத்திமுடி வருட வெடித்திடுவாள் வெட்கத்தில்/
ஆத்தங்கரையோரம் அயிரை மீன் வாசத்தை/
ஆசையாய் ஊட்டிடக் காத்திருக்கும் பொன்னியிவள்/

ஆசைகள் பல்லாயிரம் நெஞ்சில் மோதலுற/
ஆழ் துயிலிலும் கனவாய்த் தளிர்க்கும்/
ஆசை மச்சானுடன் ஆயுள்வரை சேர்ந்திடவே/
ஆவலுடன் பூப்பறிக்கின்றாள் இறையன்பும் வென்றிடவே/

ஜன்ஸி கபூர்