About Me

2020/07/26

பூத்துக் குலுங்கும் பொன்னியிவள்

 

குண்டுமல்லி தேனூற்றும் கூந்தல் அலைவில்/ 
வண்ணப்பூச்சிகள் மொய்த்து விழும் விழிகள்/
தீண்டும் மருதாணிச் சாற்றிலுரசும் இதழ்கள்/
வண்ண நிலாவின் உருத்தானோ பொன்னியிவள்/

பட்டுச்சேலை மோதி யுடைக்கும் தென்றலைத்தான்/
பட்டுவிரலும் தொட்டாலோ விரியும் மொட்டுக்களும்தான்/   
கட்டுடம்பும் கருவாய் இசைந்திடும் கவிக்கே/
எட்டுத்திக்கும் பிழிந்திடும் அமிர்தமே பொன்னியவள்/

ஓத்தையடிப் பாதையிலே காத்திருக்கும் மச்சானும்/
நெத்திமுடி வருட வெடித்திடுவாள் வெட்கத்தில்/
ஆத்தங்கரையோரம் அயிரை மீன் வாசத்தை/
ஆசையாய் ஊட்டிடக் காத்திருக்கும் பொன்னியிவள்/

ஆசைகள் பல்லாயிரம் நெஞ்சில் மோதலுற/
ஆழ் துயிலிலும் கனவாய்த் தளிர்க்கும்/
ஆசை மச்சானுடன் ஆயுள்வரை சேர்ந்திடவே/
ஆவலுடன் பூப்பறிக்கின்றாள் இறையன்பும் வென்றிடவே/

ஜன்ஸி கபூர் 







No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!