About Me

2020/09/28

நினைக்காத நேரமில்லை

 

மனதை வருடுகின்ற உன் நினைவில்/

மயங்கிக் கிடக்கிறேன் தேகம் சிலிர்க்கவே/

கனவும் விரிக்கின்ற உன் வதனமதை/

நினைவுக்குள் ஏந்தித் துடிக்கின்றேன் தினமும்/


அன்புச் சாறும் பிழிந்தே நனைக்கும்/

உன் புன்னகைக்குள் கரைகிறேனே காதலில்/

நீ வீசுகின்ற பார்வைத் தென்றல்/

எனைத் தழுவுகையில் சுவாசமே நீயாக/


மறக்கின்றேன் என்னையே நறவுச் சிற்பமே/

அழியாத நினைவுக் கலவைக்குள் வார்க்கின்ற/

அழகு தேவதையே உந்தன் மௌனமும்/

இம்சிக்கிறதே இதயத்தினை சுந்தர வலியுடனே/


நீ உதிர்க்கின்ற சுவடுகள் பூக்கின்றதே/

நீளுகின்ற நம் அன்பினை ரசித்தே/

நினைவுகளும் முக்காடிடுமோ காலத் திரையில்/

அணைக்கக் காத்திருக்கிறேன் உனைச் சூடவே/


என்னுயிரே உனை நினைக்காத நேரமில்லை/

கண்பூத்துக் காத்திருக்கிறேன் நீயும் வரும்வரை/


ஜன்ஸி கபூர்  








------------------------------------------------------------------------------------------------------------

2. தன்முனைக் கவிதை
முயற்சி
------------
முயற்சிக்கின்ற ஒவ்வொரு நொடியும்//
இலக்கும் நெருங்குகின்றதே// 
துணிவும் தன்னம்பிக்கையும்//
வெற்றியாக மாறுகின்றதே//

ஜன்ஸி கபூர் -  30.09.20

------------------------------------------------------------




கலப்படம்

 கலப்படம்

தந்திரம் கொண்டோர் தரிக்கின்றனர் கலப்படத்தில்/

தரத்தினை மாற்றியே ஆள்கின்றனர் சுயநலத்தில்/

நோய்களும் சாயுமே தரமற்ற பொருட்களில்/

நோவினையும் தந்திடுமே ஏமாற்று வியாபாரம்/

நுகர்வோரைப் பாதிப்போர் அணியட்டுமே கைவிலங்கை/

நுகர்ந்திடும் நமக்கும் வேண்டுமே விழிப்புணர்வும்/

ஜன்ஸி கபூர்  




 


 

மண்ணில் இந்த காதலன்றி

 


விழி யின்பம் நுகர்ந்திடும் காதல்

விழுகின்றதே இதயத் துடிப்புக்களில் ஒலியாகி

தழுவுகின்ற பெண்மையின் தித்திப்பின் அதிர்வுகள்

எழுகின்றதே இன்னிசையாக ஏக்கத்தைப் பிழிந்து


கனவின் உயிர்ப்பும் கருவுறும் மண்ணிலே

கனிந்த தேனும் வார்த்திடும் பெண்ணவளாய்

கண்கள் உரசும் மின்னல் பார்வைக்குள் 

கன்னமும் பிழியுமே மாதுளைச் சாற்றினை


வெண் மல்லிகை படர்கின்ற உதட்டிலே

கொஞ்சுமே சங்கத் தமிழும் உறவாகி

பஞ்சில் செதுக்கிய மென் மேனியில்

கொஞ்சுகின்றதே சந்தனமும் வாசத்தைத் தடவி   


அன்பும் மொய்க்கின்ற மென்னிதய அலைவை

அரவணைக்கின்ற சிற்றிடை நிலாவின் கீற்றோ

அகிலத்தின் ஒளி யவள் நிழலினை

அணைக்காதவன் இழக்கின்றான் இன்பத்தின்; சுவைதனை


உணர்வினை உரசிப் பூக்கின்ற பெண்மைக்குள்

உறவினைத் தேடாதவன் ஒளியிழக்கின்றான் வாழ்வில்

வளைந்த புருவத்தில் வாசமூட்டும் தென்றலினை

உணராதவன் உயிர்ப்பும் இழக்கின்றான் தன்னிலே 


அமுதச் சுவையின் சுகத்தில் சுவாசத்தை 

அழகுற ஏந்தி  மென்னிதழ்களை ரசிக்காதவன்

துறவெனும் மாயைக்குள் நனைகின்றான் தனிமையில்

அழகில் துளிர்க்கின்ற பெண் பேரின்பமே

ஜன்ஸி கபூர் - 27..09.20




 


 

 


2020/09/25

கவிதாஞ்சலி

 

மரண ஊர்வலம் கீதமும் உயிர்ப்பிற்கோ

மகிழ்ந்த விழிகளில் மழையும் பூக்கின்றதோ

இசைக்குள் இசைந்த செவிகளும் சுருங்கியே

ஓசையிழந்தே வலியில் துடிக்கின்றனவே இப்போ


ஏழிசைச் சுரவரிசை ஏக்கத்தின் அதிர்வில்

ஏந்திடுமோ மனமினி காந்தக் குரலினை

சிந்திய புன்னகைகளினி கசிந்திடுமோ தகனத்தில்

சிந்தையின் கலக்கத்தில் வலியும் படர்கின்றதே


தலைமுறை கடந்தும் தளிர்த்திடுமே குரலும்

கலைக்கு இல்லையே முதுமையும் இறப்பும்

தழுவிய கொரோனா தகர்த்ததோ இனிமைக் குரலை

தவிக்கின்ற நெஞ்சங்களின் சோகங்களும் காற்றலையில்


இதயம் கனத்திடும் இரங்கல் மொழியிது

உதய கீதம் இசைத்த சோதரனுக்கே

உறங்கிடும் நீண்ட வாழ்வுக்குள் இனி

உலவட்டும் ஆன்மாவும் சாந்தி வெளியில்


ஜன்ஸி கபூர்  - 25.09.2020



 

கண்ணீர் அஞ்சலி
-------------------------------
நலம் வாழ வாழ்த்திய குரல்/
அழ வைத்ததோ நெஞ்சும் கலங்கிட/
உளப் பண்பால் உலகமே உறவாக/
உயர்ந்த அன்பால் விழிகள் நனைகிறதே/

மூச்சுக்காற்றில் மென்னிசையை வார்த்தே வாழ்ந்த/
முழு நிலாவுக்குள் திரையோ மரணத்தில்/
முதுமை அறியாத இனிமைக் குரலை/
முழு உலகமும் ஏந்துமோ செவியினில்/ 

தங்கத் தமிழில் பாடல்களைச் செதுக்கியே /
சங்கீத இசையால் தேனும் தெளித்த/
காந்தக் குரலோன் வசீகரித்த மனதில்/
கலக்கின்றதே கலியின் துளிகளும் கலங்கி/

அறுந்ததோ மூச்சும் அதிர்கின்றதே மனமும்/
வருந்தச் செய்ததே கொரோனாவின் வலிமையும்/
ஓரக் கண்ணில் துளிர்க்கும் கண்ணீர்/
ஓராயிரம் பாடலிசைத்த நிலாவுக்கு சமர்ப்பணமே/

 
ஏனோ விதியும் அழைத்ததோ மென்னிசையை/
தேனைச் சுவைத்த செவிகளில் இன்று/
வீழ்ந்ததே சோகமும்  விழியோரம் கண்ணீரே/
வாழுமே பல்லாண்டு இறவாப் பாடல்களும்/

 
கண்ணீர் அலை 
 
வானம்பாடி இசைத்த கானம் மனதிலே
உயிர்த்ததே தமிழ் மொழியும் பிசைந்தே
உணர்வில் தனிமை விரட்டும் மென்னிசையால்
உறவாகியதே நெஞ்சும் நறவுக்குள் செவியே
பல்லாயிரம் பாடல்கள் செதுக்கிய குரலும்
ஓர விழிகள் அழுதிடப் பறந்ததே



பாடு நிலாவுக்கு கவிதாஞ்சலி
 
இசையால் மயங்க வைத்த குரலுக்கு/
இன்று இரங்கலோ விழிகளில் கண்ணீரே/
இனி ஏந்துமோ செவியும் கீதத்தை/
இல்லையே இறப்பும் வானம்பாடியின் குரலுக்கே/

இதழோரப் புன்னகையை உறிஞ்சியதோ மரணமும்/
இனித்திடும் தேனிசைகள் உறங்கிடுமோ காற்றினில்/
மௌனம் ஏந்தும் விண்ணுலகப் பயணத்தில்/
மெல்லத் தவழ்கிறதே வலியின் வீரியம்/

மூங்கில் துளையினில் மூச்சினைப் புகுத்தியே/
தங்கத் தமிழில் வார்த்த குரலோசை/
தலைமுறை கடந்தும் வாழுமே ரசிப்பில்/
தரணியில் செழித்து தடமாகுமே அற்புதமாக/

உறவினைப் பிரிந்த வலியில் உணர்வுகள்/
உறங்கிடாத செவிக்குள் அதிர்கின்றதே பாடல்களும்/
சிரிக்கின்ற கன்னத்தைச் சிதைத்ததோ மரணமும்/
வரிகளில் புதைக்கின்றேன் நிலாவுக்கு கவிதாஞ்சலி/

Jancy Caffoor