About Me

2020/09/28

நினைக்காத நேரமில்லை

 

மனதை வருடுகின்ற உன் நினைவில்/

மயங்கிக் கிடக்கிறேன் தேகம் சிலிர்க்கவே/

கனவும் விரிக்கின்ற உன் வதனமதை/

நினைவுக்குள் ஏந்தித் துடிக்கின்றேன் தினமும்/


அன்புச் சாறும் பிழிந்தே நனைக்கும்/

உன் புன்னகைக்குள் கரைகிறேனே காதலில்/

நீ வீசுகின்ற பார்வைத் தென்றல்/

எனைத் தழுவுகையில் சுவாசமே நீயாக/


மறக்கின்றேன் என்னையே நறவுச் சிற்பமே/

அழியாத நினைவுக் கலவைக்குள் வார்க்கின்ற/

அழகு தேவதையே உந்தன் மௌனமும்/

இம்சிக்கிறதே இதயத்தினை சுந்தர வலியுடனே/


நீ உதிர்க்கின்ற சுவடுகள் பூக்கின்றதே/

நீளுகின்ற நம் அன்பினை ரசித்தே/

நினைவுகளும் முக்காடிடுமோ காலத் திரையில்/

அணைக்கக் காத்திருக்கிறேன் உனைச் சூடவே/


என்னுயிரே உனை நினைக்காத நேரமில்லை/

கண்பூத்துக் காத்திருக்கிறேன் நீயும் வரும்வரை/


ஜன்ஸி கபூர்  








------------------------------------------------------------------------------------------------------------

2. தன்முனைக் கவிதை
முயற்சி
------------
முயற்சிக்கின்ற ஒவ்வொரு நொடியும்//
இலக்கும் நெருங்குகின்றதே// 
துணிவும் தன்னம்பிக்கையும்//
வெற்றியாக மாறுகின்றதே//

ஜன்ஸி கபூர் -  30.09.20

------------------------------------------------------------




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!