உதிரத்தால் நெய்த அன்பின் வருடல்/
உறவாக முகிழ்த்ததே அன்னையின் வடிவில்/
அகிலத்தில் உண்டோ அன்னைக்கு இணையாக/
அரவணைத்தால் கழன்றோடுமே உள்ளத்தின் வலிகள்/
தன் நிழலினைப் போர்வையாக்கும் பாசத்தில்/
எண்ணமும் நனையுமே மகிழ்வினை ஊற்றியே/
ஜன்ஸி கபூர் - 28.09.20
உதிரத்தால் நெய்த அன்பின் வருடல்/
உறவாக முகிழ்த்ததே அன்னையின் வடிவில்/
அகிலத்தில் உண்டோ அன்னைக்கு இணையாக/
அரவணைத்தால் கழன்றோடுமே உள்ளத்தின் வலிகள்/
தன் நிழலினைப் போர்வையாக்கும் பாசத்தில்/
எண்ணமும் நனையுமே மகிழ்வினை ஊற்றியே/
ஜன்ஸி கபூர் - 28.09.20
மனதை வருடுகின்ற உன் நினைவில்/
மயங்கிக் கிடக்கிறேன் தேகம் சிலிர்க்கவே/
கனவும் விரிக்கின்ற உன் வதனமதை/
நினைவுக்குள் ஏந்தித் துடிக்கின்றேன் தினமும்/
அன்புச் சாறும் பிழிந்தே நனைக்கும்/
உன் புன்னகைக்குள் கரைகிறேனே காதலில்/
நீ வீசுகின்ற பார்வைத் தென்றல்/
எனைத் தழுவுகையில் சுவாசமே நீயாக/
மறக்கின்றேன் என்னையே நறவுச் சிற்பமே/
அழியாத நினைவுக் கலவைக்குள் வார்க்கின்ற/
அழகு தேவதையே உந்தன் மௌனமும்/
இம்சிக்கிறதே இதயத்தினை சுந்தர வலியுடனே/
நீ உதிர்க்கின்ற சுவடுகள் பூக்கின்றதே/
நீளுகின்ற நம் அன்பினை ரசித்தே/
நினைவுகளும் முக்காடிடுமோ காலத் திரையில்/
அணைக்கக் காத்திருக்கிறேன் உனைச் சூடவே/
என்னுயிரே உனை நினைக்காத நேரமில்லை/
கண்பூத்துக் காத்திருக்கிறேன் நீயும் வரும்வரை/
ஜன்ஸி கபூர்
------------------------------------------------------------------------------------------------------------
கலப்படம்
தந்திரம் கொண்டோர் தரிக்கின்றனர் கலப்படத்தில்/
தரத்தினை மாற்றியே ஆள்கின்றனர் சுயநலத்தில்/
நோய்களும் சாயுமே தரமற்ற பொருட்களில்/
நோவினையும் தந்திடுமே ஏமாற்று வியாபாரம்/
நுகர்வோரைப் பாதிப்போர் அணியட்டுமே கைவிலங்கை/
நுகர்ந்திடும் நமக்கும் வேண்டுமே விழிப்புணர்வும்/
ஜன்ஸி கபூர்
விழி யின்பம் நுகர்ந்திடும் காதல்
விழுகின்றதே இதயத் துடிப்புக்களில் ஒலியாகி
தழுவுகின்ற பெண்மையின் தித்திப்பின் அதிர்வுகள்
எழுகின்றதே இன்னிசையாக ஏக்கத்தைப் பிழிந்து
கனவின் உயிர்ப்பும் கருவுறும் மண்ணிலே
கனிந்த தேனும் வார்த்திடும் பெண்ணவளாய்
கண்கள் உரசும் மின்னல் பார்வைக்குள்
கன்னமும் பிழியுமே மாதுளைச் சாற்றினை
வெண் மல்லிகை படர்கின்ற உதட்டிலே
கொஞ்சுமே சங்கத் தமிழும் உறவாகி
பஞ்சில் செதுக்கிய மென் மேனியில்
கொஞ்சுகின்றதே சந்தனமும் வாசத்தைத் தடவி
அன்பும் மொய்க்கின்ற மென்னிதய அலைவை
அரவணைக்கின்ற சிற்றிடை நிலாவின் கீற்றோ
அகிலத்தின் ஒளி யவள் நிழலினை
அணைக்காதவன் இழக்கின்றான் இன்பத்தின்; சுவைதனை
உணர்வினை உரசிப் பூக்கின்ற பெண்மைக்குள்
உறவினைத் தேடாதவன் ஒளியிழக்கின்றான் வாழ்வில்
வளைந்த புருவத்தில் வாசமூட்டும் தென்றலினை
உணராதவன் உயிர்ப்பும் இழக்கின்றான் தன்னிலே
அமுதச் சுவையின் சுகத்தில் சுவாசத்தை
அழகுற ஏந்தி மென்னிதழ்களை ரசிக்காதவன்
துறவெனும் மாயைக்குள் நனைகின்றான் தனிமையில்
அழகில் துளிர்க்கின்ற பெண் பேரின்பமே
ஜன்ஸி கபூர் - 27..09.20