About Me

2020/11/02

பாதை

 


1 பாதை

-----------

நீண்ட பாதையில்/

நிதானமாகப் பயணிக்கின்றேன்/

வாழ்வியல் அனுபவங்கள்/

வழிகாட்டிச் செல்கின்றன/


ஜன்ஸி கபூர் - 2.11.2020

 



 

எழுத்தாணிக் கவிதைகள்

 


   அகலா தணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
 
தமக்கியல்பாக தனைமாற்றும் உயர் அதிகாரம்/
தடுமாறித் தளம்பும் உளத்திற்கான அங்கீகாரம்/
தம்நிலை உணர்ந்திடல் சிறப்பே உடனிருப்போருக்கு/
தமைக்காத்து வாழ்தலே வாழ்வுக்கும் சிறப்பு/
தீயினில் குளிர்காய்தல்போல மிகஅகலாதும் அணுகாதும்/
திருத்திட வேண்டும் தம் நடத்தைகளை/
மிகை நெருக்கமது புலப்படுத்தும் பலகீனங்களை/
விலகியிருத்தலும் பெற்றுத்தரா உயர் நன்மைகளை/
பக்குவமாகப் பழகும் பண்பதனைப் பெற்றோரே
பணியிடங்களில் வெற்றிகளைக் குவிக்கின்றார் உவந்தே/
 


 தாயும் ஆனவன்
தள்ளாடும் மேனியைத் தாங்கிடும் தூணாய்/
தாய்க்கே நிழலாகும் தனயனின் அன்பில்/
சுவர்க்கமும் உயிர்க்குமே சுந்தர பூமிக்குள்/
சுமை வாழ்வுக்குள் சுகமும் பரவுமே/

முதுமைக்குள் மூழ்கையில் துணையின் வாசமே/
முகவரியாகும் தள்ளாடும் மேனிக்கும் சுவாசமாக/
நோயுற்ற போதெல்லாம் நோவுற்றே காத்திட்ட/
ஈன்றவளின் நிழலெனவே படர்கின்ற பிள்ளையே/ 

சேயாகத் துளிர்த்திடும் அன்னையைக் காத்திடும்/
தாயும் ஆனவனைத் தரணியும் போற்றுமே/

  வாலிபமும் வயோதிகமும்

வயதெனும் எண்ணுக்குள் வசப்படுவதில்லை மனதும்/

வழிகின்ற உணர்வுகளால் பக்குவப்படுகின்றதே வாழ்வும்/

வாலிபமும் வயோதிகமும் பருவத்தின் சுழற்சியே/

முதுமைக்குள் முடங்கிடாத இளமை நினைவுகளை/

இரசித்திடும் விழிகளுக்கு திரையிடுமோ காலமும்/


ஜன்ஸி கபூர்  

 













































































































































2020/11/01

நிலாமுற்றம்


குழந்தை தவழும் மனை யிலென்றும்/

குன்றாதே செல்வமும் குவிந்தே சிறக்கும்/

குதூகலச் சிரிப்பினில் குறைந்திடும் வலியும்/

குடும்ப வம்சமும் உயிர்த்திடுமே மழலையால்/


--------------------------------------------------------------------
3.பயணம்
*********** 
இலக்கினை வகுத்தே/
பயணத்தில் தொடர்ந்திடு/
தடைகள் விலக/
பாதைகள் தெளிவாகும்./

ஜன்ஸி கபூர் - 7.11.2020
-------------------------------------------------------------------


4. நிதியின் காலடியில்
********************** 
நிதி ஆள்கின்றதே  
......நிலையற்ற வாழ்வை/
நினைத்திடும் காரியம்
......நிறைவேற்றும் சக்தியிது/

நிதர்சனப் பொழுதுகளில் 
......நிம்மதியைப் பறிக்கின்ற/
விதியின் காலடியில் 
.......விளையாடுகின்றோம் பொம்மைகளாகி/

ஜன்ஸி கபூர் - 8.11.2020

--------------------------------------------------------------------------------------------------
5. உன்னத சேவை
-----------------------------
ஆசிரியர் ஆற்றிடும் சேவையின் மகத்துவம்/
செதுக்குமே நற்பிரஜைகளை நானிலச் சுழற்சியில்/
அறிவினைப் புகட்டி ஆற்றலை வார்த்து/
ஏணியாக உயர்த்தும் உன்னதமான ஆசான்

ஜன்ஸி கபூர் - 11.11.2020


---------------------------------------------------------------------------------------------


6. தித்திக்கும் தீபாவளி
********************** 
தீபங்களின் ஒளியில் இல்லங்கள் மகிழ்ந்திட/
திக்கெங்கும் மத்தாப்புக்கள் சிதறிச் சிரித்திட/
உள்ளங்களின் மகிழ்வில் ஊரெல்லாம் ஒளிர/
உறவாகி அணைக்குதே உவகைத் திருநாள்/

ஜன்ஸி கபூர்  - 12.11.2020
------------------------------------------------------------------------------------------ 


7. இலக்குப் பயணம்
-------------------------------
தடையை விலக்கி உடையாத இலக்கில்/
நடை போடும் நளினம் கண்டே/
விரிகின்றதே விழிகளும் சிற்றுயிரியின் ஒழுக்கத்தினில்/
நீண்ட தூரம் நிதான வேகம்/

குலையாத உறுதியில் குதூகலப் பயணம்/
சுயநலம் இல்லாமலே கூடிடும் வாழ்வால்/
சுகமும் பெறுமே சமூகக் கூட்டம்./
ஒன்றாய் இணைந்து ஒழுங்கைப் பேணி/

ஒற்றுமையாகச் சென்றே சேமிக்கும் நுட்பம்/
நமக்கும் தேவையே உழைத்திடலாம் சோர்வின்றியே/
சுறுசுறுப்பும் முயற்சியும் வெற்றியின் பக்கங்களே/
கற்றுணர்ந்தால் நாமும் பெற்றிடலாம் பெருமைதனை/

 ஜன்ஸி கபூர் - 19.11.2020
---------------------------------------------------------------------------------------------

8. வறுமை
---------------
வறுமை கொண்ட 
வாழ்வு ஏங்குது/
பொறுமை இழந்து 
மனமும் போராடுது/

ஜன்ஸி கபூர் - 21.11.2020
--------------------------------------------------------------------- 
உயிர்க்கும் விதைகள்
*********************** 
வீரம் விளைந்த மண்ணில் புதையும்/
விதைகள் யாவும் சரிதம் பேசும்/
வன்முறை தொடாத இலட்சியச் சமரில்/
தன்மானம் காத்திட உரமாக உயிர்க்கும்/

ஜன்ஸி கபூர் - 26.11.2020


ஒருநாள் இரவில்

1. ஒருநாள் இரவில்

---------------------------

சலனமற்ற இரவும் அவிழ்க்கின்ற மௌனத்தில்/

சங்கமிக்கின்றன நம் உணர்வுகள் இதமாக/

மெலிதாகத் தீண்டுகின்ற உன் விரல்களால்/

மெருகேறுகின்றதே என் வெட்கப் புன்னகையும்/

விரிகின்ற நீள்வானில் ஒளியினைப் பிசைகின்ற/

விண்ணிலாவும் கவியெழுதுகின்றதோ நம் காதலிற்கே/

--------------------------------------------------------------------------- 

2,நான் அனுப்புவது கடிதம் அல்ல

********************************** 

உயரப் பறந்த உன்றன் சிறகினைத்/

தொட்டிடத் துடிக்கின்றேன் நடுவில் சாகரமோ/

எட்டிப் பார்க்கின்றாய் கனவின் விழிகளில்/

கட்டியணைத்தே கன்னம் சிவந்திடத் துடிக்கின்றேன்/


உனைத் தழுவிய விரல்களின் தவிப்பு/

உருமாறுகிறதே வரிகளாய் உன் வசமாக/

தனிமைக்குள் முகம் புதைக்கும் எண்ணங்களைத்/

திணிக்கின்றேன் மடலில் நீயும் ஏந்திடவே/


ஏக்கத்தைப் பிழிந்தே தீட்டினேன் வார்த்தைகள்/

ஏற்றிடு  என்னுள்ளத்தை  உன்றன் கரங்களில்/ 

------------------------------------------------------------------------------ 

 

3. நாணமோ இன்னும் நாணமோ

*********************************** 

சுருங்கிய தேகங்கள் சுமக்கின்ற அன்பு/

சுகத்தின் இரம்மியத்தில் சுவைக்கின்றதோ மகிழ்வினை/

நரை கண்டும் குறைந்திடாக் காதல்/

திரைதனை விரிக்காது ரசிக்கின்றதோ வெட்கத்தை/

முதுமைக்குள் சிரிக்கின்ற வாலிபக் காதலிது

------------------------------------------------------------------- 

 4. காணி நிலம் வேண்டும்
************************** 
காணி நிலம் வேண்டும் அதில்/
கனிந்திடும் நல்மரங்கள் முளைத்திடல் வேண்டும்/
பசுமையின் அழகினை நிதமும் சுவைத்திட/
பச்சை வயல்களும் செழித்திடல் வேண்டும்/

மழையும் வெயிலும் குடிபூரா வீடொன்றில்/
மங்கள உறவுகளுடன் வாழ்ந்திடல் வேண்டும்/
தென்றலின் சந்தத்துடன் தென்னங்கீற்றுக்களின் பாட்டொலி/
தெவிட்டா இசையாகி அணைத்திடல் வேண்டும்./

----------------------------------------------------------------------- 
5. வெற்றிக்கான உன்றன் பயண நடை/   
வெல்லுமே  தடை வீழ்த்தி/
சூழ்கின்ற இடர்தனை   உடை/
வாழ்வியல் புதிர்களுக்கான விடை கிடைக்கும்/

------------------------------------------------------------------------ 
 
6



7. புன்னகைப் பூக்கள்
******************** 
கொஞ்சுகின்ற நினைவுகள் சுவைக்கின்றதோ உணர்வினை/
இதழ்களின் மடிப்பினில் தழுவும் புன்னகை/
இன்பத்தில் மலர்கின்றதே அழகாக/

ஜன்ஸி கபூர் - 7.11.2020
------------------------------------------------------- 




8. அழகு மலர்
-------------------------
சின்ன வெண்ணிலா மண்ணில் உலாவுகையில்/
வண்ண மலர்கள் கொஞ்சுதே மகிழ்வாய்/
பஞ்சுக் கன்னங்கள் ரசித்திடும் புன்னகை/
நெஞ்சினில் வீழ்கின்றதே இன்பத்தின் மொழியாகி/

ஜன்ஸி கபூர் - 9.11.2020


---------------------------------------------------------------------------------------- 

9. ஏதோ நினைவுகள் கனவுகள் நெஞ்சிலே
-------------------------------------------------------------------------
இயந்திரமாக உழைக்கின்ற இதமற்ற வாழ்விலே/
இசைகின்ற சுமைகள் இன்னலை வருடுகையில்/

தொலைகின்றதே வசந்தமும் தொல்லையோடு தனிமை/
கடந்துபோன காலங்களின் களிப்பூட்டும் நிழல்கள்/

தடம்பதிக்கும் இனிமையாக தொடரூந்துப் பயணமதில்/
விரைவோட்ட அசைவிலும் அவிழாத கனவுகள்/

விழுகின்றபோது விழிகளும் மெய்மறந்தே ரசிக்கின்றன/
மகிழ்வோடு பூத்த மானசீகப் பொழுதுகளை/

ஜன்ஸி கபூர் - 11.11.2020



--------------------------------------------------- 

10. ஒளி வீசும் உன் அழகால்/
களிப்படைகின்றதே என்றன் காதல் மனதும்/
வெளிக்குள் உலாவும் உன் னிழலை/
எனைப் போல் கொஞ்சிடுதோ வளியும்/

ஜன்ஸி கபூர் - 12.11.2020

------------------------------------------------- 

11 தாய் மடி கிடைக்குமா ------------------------------- நகரும் பொழுதுகளை
நசுக்குகின்றதே வறுமை/ நகைக்கின்ற விதிக்குள்
நனைகின்றதே துயரும்/ கண்ணீரின் ஈரலிப்பில்
கண்களும் துடித்திட/ அலைகின்ற அலைகளை
அணைக்கிறேன் மனதுள்/ சோகங்களை மறப்பதற்கே
தாய்மடி கிடைக்குமா/
ஜன்ஸி கபூர் - 17.11.2020
--------------------------------------------------------------

12. புன்னகை மலரே

நெஞ்சத்தைத் தழுவும் அன்பு மலரே
அள்ளுகின்றேன் உன்றன் அழகினைக் கண்ணுக்குள்
வெள்ளைக்குதிரை மீதேறி நீயும் சுற்றுகையில்
உள்ளத்தின் களிப்பில் பூக்கின்றதோ புன்னகையும்

ஜன்ஸி கபூர் - 17.11.2020




-------------------------------------------------------------- 
13. சந்திப்பு

நிலவொளி சிந்தும் நதிக்கரை ஓரம்
உலாவும் தென்றலில் மேனி நனைத்தே
உள்ளங்கள் பிணைந்த சந்திப்பு வேளை
மொழிகள் மறந்த அன்பின் மலர்வில்
கனிந்த காதல் உயிர்க்கின்றது கண்களில்

ஜன்ஸி கபூர் - 20.11.2020

------------------------------------------------------------------------- 


14. என் உலகம்
************* 
சுதந்திர பூமிக்குள் 
சுடுகின்ற வாழ்க்கை/
சுற்றமும் உறவும் 
சூழ்ந்திடாத தனிமை/

விரிகின்றது எனக்குள் 
விடிவில்லாப் போராட்டமாக/
சிறகு அறுந்தாலும் 
பறக்கத் துடிக்கின்றேன்/

ஜன்ஸி கபூர் - 21.11.2020