1. வாராய் - வாராய்
---------------------------------
வாராய் மழையே மேகம் பிழிந்தூற்றட்டும்/
வானவில் பின்னிடும் வண்ணக் கலவையும்/
மண்வாசச் சுவையினில் கலந்திடும் தென்றலும்/
என் ரசிப்புக்குள் வீழ்ந்திடவே வாராய்/
ஜன்ஸி கபூர் - 5.11.2020
1. வாராய் - வாராய்
---------------------------------
வாராய் மழையே மேகம் பிழிந்தூற்றட்டும்/
வானவில் பின்னிடும் வண்ணக் கலவையும்/
மண்வாசச் சுவையினில் கலந்திடும் தென்றலும்/
என் ரசிப்புக்குள் வீழ்ந்திடவே வாராய்/
ஜன்ஸி கபூர் - 5.11.2020
சோபனங்களைச் சுமந்து பயணிக்கின்ற வாழ்வு/
சோர்ந்து வீழ்கின்றதே வறட்டுக் கௌரவத்தில்/
நிசங்களின் துளைகளை நிரப்புகின்றன மாயைகள்/
நிம்மதி கலைக்கையில் நிதானமிழக்கின்றது மனது/
தனக்கான வாழ்வினை பிறர் தரிப்பிடங்களாக்கி/
தகுதியில்லாக் கௌரவத்தினுள் தனையும் அடக்கி/
தவிப்புக்களைச் சுமந்து தத்தளிப்போரின் உயிர்ப்பு/
தள்ளாடுதே தினமும் அவலச் சுமைக்குள்/
அடுத்தவர்க்கே அஞ்சி தன்னையே ஒளிப்போர்/
அவனிக்குள் அலைகின்ற சுயமற்ற மாந்தரே/
ஜன்ஸி கபூர் - 05.11.2020
உணர்வுகளின் மொழிவில் உறவானாய் என்னுள்/
உதடுகளும் நிதம் உனையே உச்சரிக்க/
உதிர்கின்ற பொழுதெல்லாம் உயிர்க்கின்றாயே நினைவுகளாக/
உலகத்தின் ஈர்ப்புக்குள் உடையாதே அன்பும்/
உள்ளத்தில் தினமும் உனையேந்தி வாழ்வதற்காகவே/
உலகத்தில் பிறந்தேனே பூவே உனக்காக/
ஜன்ஸி கபூர் - 12.11.2020
உதிர்கின்ற பொழுதுகள் உரமாக்குகின்ற செயல்கள்/
உறைகின்றன நெஞ்சினில் உன்னதமான காலச்சுவடுகளாக/
உணர்வுக்குள் வீசுகின்ற நினைவுகளின் வாசங்கள்/
பத்திரப்படுத்தப்படுகின்றன மனதினில் காலத்தின் சேமிப்பாக/
சுதந்திரமாக விழிக்குள் சுற்றிய கனாக்கள்/
வாழ்க்கைத் தடங்களின் வளமான பண்பாடுகள்/
வறுமையையும் கிழித்து வாழ்கின்ற முனைப்பு/
வரலாற்றுடன் இணைந்தே துளிர்க்கின்றன தலைமுறைகளுக்குள்/
போரின் மூர்க்கம் போதித்த தாக்கம்/
போக்கிடமின்றித் தவித்த பெருந்துன்பங்களின் வீரியங்கள்/
துளைத்த கணங்கள் துடிக்கின்றன இன்னும்/
துடைத்தெறியப்படாத மறதிக்குள் துயரும் நீள்கின்றது/
அணிவகுத்துச் செல்கின்ற அகிலத்தின் அவலங்கள்/
அவ்வவ்போது அணிகின்ற சமாதானங்களின் மலர்ச்சி/
ஒவ்வொரு ஆத்மாக்களின் உயிர்ப்புக்களின் இருப்புக்களாகி/
தரித்து நிற்கின்றன காலமெனும் காலச்சுவட்டினுள்/
ஜன்ஸி கபூர் - 08.11.2020